Asean Summit 2025 : இந்தியா உறுதுணையாக நிற்கிறது – ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
PM Modi : 2025 ஆம் ஆண்டு ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் இன்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நேரில் கலந்துகொள்வதாக இருந்த நிலையில் பின்னர் திட்டம் மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் விர்ஜூவல் முறையில் பிரதமர்மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் இந்தியா குறித்து பேசினார்.

பிரதமர் மோடி
மலேசியாவின் கோலாலம்பூரில் அக்டோபர் 26ம் தேதியான இன்று தொடங்கிய 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் முறையில் கலந்து கொண்டார். தனது உரையில், மலேசிய பிரதமருக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி, பிரதமரும் எனது நண்பருமான அன்வர் இப்ராஹிமுக்கு நன்றி. ஆசியான் குடும்பத்தில் இணைய எனக்கு இந்த வாய்ப்பை நீங்கள் வழங்கியுள்ளீர்கள், அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிகரமான உச்சிமாநாட்டிற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.
வீடியோ:
My remarks during the ASEAN-India Summit, which is being held in Malaysia. https://t.co/87TT0RKY8x
— Narendra Modi (@narendramodi) October 26, 2025
மேலும் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் ஆசியானும் புவியியல் ரீதியாக மட்டுமல்ல, கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் அடிப்படையிலும் நெருக்கமாக உள்ளன என்று தெரிவித்தார். மேலும், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் கலாச்சார உறவுகளும் வலுவானவை . ஆசியான் இந்தியாவின் ‘கிழக்கு செயல்பாட்டுக் கொள்கையின்’ முக்கிய தூணாகும், மேலும் ஆசியான் மையத்தன்மை மற்றும் இந்தோ – பசிபிக் முன்னோக்கை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது என்பது தெளிவாகிறது என்றார்.
Also Read : ரகசிய ஆவணங்கள் பதுக்கல்.. இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது!
இந்தியா-ஆசியான் கூட்டாண்மை
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்தியா-ஆசியான் விரிவான மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக மோடி கூறினார். இந்த வலுவான கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு ஒரு ஆதாரமாக உள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு ஆசியான் உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை’, இது நமது கூட்டு முயற்சிகளை பிரதிபலிக்கிறது என்றும், டிஜிட்டல் உள்ளடக்கம், உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்து வருவதாகவும் அவர் விளக்கினார்.
ஒத்துழைப்பு
கடினமான காலங்களில் இந்தியா எப்போதும் அதன் ஆசியான் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருந்து வருவதாகவும், மனிதாபிமான உதவி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். இந்த சூழலில், 2026 ஆம் ஆண்டு ‘இந்தியா – ஆசியான் கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்றும் அவர் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டு இந்தியா-ஆசியான் நூற்றாண்டு என்று மோடி நம்பிக்கையுடன் கூறினார். ஆசியான் சமூக தொலைநோக்கு 2045 மற்றும் வளர்ந்த இந்தியா 2047 இன் இலக்குகள் ஆகியவை உலகளாவிய மனிதகுலத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் காண்பிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியான் உச்சி மாநாடு என்றால் என்ன?
ஆசியான் உச்சி மாநாடு (ASEAN Summit) என்பது, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN – Association of Southeast Asian Nations) ஆகும். இந்த கூட்டமைப்பின் உறுப்புநாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து முக்கிய விஷயங்களை கலந்து ஆலோசிப்பதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.