தீவிரமாகும் தாக்குதல்… அமெரிக்காவை போருக்கு அழைத்த இஸ்ரேல்.. என்ன நடக்கிறது?
Israel Iran Conflict : இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவிடம் முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, ஜூன் 15 : ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என இஸ்ரேல் (Israel) வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரானின் ஆணு அயுத நிலையங்களை அழிக்க இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு இடையே (Israel Iran Conflict) பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2025 ஜூன் 13ஆம் தேதி ஈரானின் ஆணு ஆயுத நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பிறகு ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியே, இரு நாடுகளுக்கு மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம்
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் ஏரிவாயு நிலையங்களில் அதிக தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. மிகவும் மோசமான தாக்குதல்களில் ஒன்று தெஹ்ரானில் நடந்தது. தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.




இரண்டு நாட்களில் இஸ்ரேலிய தாக்குதலில் 78 பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரானுக்குள் 150க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. தாக்குதல்கள் தொடர்ந்தபோது, டெல் அவிவ் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலின் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அணு ஆயுத நிலையங்கள், ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய தலைவர்களை குறிவைத்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலில் உள்ள முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவை போருக்கு அழைத்த இஸ்ரேல்
FROM PRESIDENT DONALD J. TRUMP:
“I gave Iran chance after chance to make a deal…” pic.twitter.com/lsCQHkyT2f
— The White House (@WhiteHouse) June 13, 2025
இந்த போர் பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த வேண்டும் என கூறி வருகின்றார். மேலும், ஈரான் அணு ஆயத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈரான் அதிக வாய்ப்புகள் கொடுத்தேன். கடினமாகவும் கூறினேன்.
ஆனால், எவ்வளவு கூறினாலும் அதனை ஈரான் ஏற்றுக் கொள்ளவில்லை. சில ஈரானியர்கள் துணிச்சலாக பேசினார்கள். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. தற்போது அவர்கள் இறந்துவிட்டார்கள். சூழல் இன்னும் மோசமாக போகிறது. ஏற்கனவே நிறைய மரணங்கள், பேரழிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றும் இல்லாமல் போகுவதற்கு முன்பு ஈரான் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும்” என்றார்.
இப்படியாக அமெரிக்காவில் நிலைப்பாடு இருக்கும் நிலையில், இஸ்ரேலை அமெரிக்காவை போருக்கு அழைத்துள்ளது. ஈரானின் அணு ஆயுதங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு உதவ இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா இதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் உலக போராக வெடிக்கும் சூழல் இருக்கும். இருப்பினும், இந்த விஷயத்தில் அமெரிக்கா மௌனம் காத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.