Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உச்சக்கட்ட பதற்றம்.. பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கலக்கத்தில் இஸ்ரேல்!

Israel Iran conflict : இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட பதற்றம்.. பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கலக்கத்தில் இஸ்ரேல்!
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Jun 2025 10:14 AM

சென்னை, ஜூன் 14 :   இஸ்ரேல் – ஈரான் இடையே போர் (Israel Iran Conflict) பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2025 ஜூன் 13ஆம் தேதியான நேற்று ஈரான் ஆணு அயுத நிலையங்களை (Iran Nuclear Sites) குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக 2025 ஜூன் 14ஆம் தேதியான இன்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் மேற்கொண்டது. இஸ்ரேலின் பல்வேறு நகரங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது. சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலிய காவல்துறை கூற்றுப்படி, ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 34 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

உச்சக்கட்ட பதற்றம்

இஸ்ரேலிய விமானப்படையின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானம் F-35 ஆகும், இது அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட ஜெட் விமானமாகக் கருதப்படுகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் சூழல் நிலவுகிறது.

முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இன்னும் பல விஷயங்கள் நடக்க உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அகற்ற இஸ்ரேலின் முயற்சிகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன” என தெரிவித்திருந்தார்.

ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறுகையில், “இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகள் இந்த தீய எதிரியின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும். போரை தொடங்கியது இஸ்ரேல் தான். நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இஸ்ரேலின் தாக்குதலின் விளைவுகள் அதை அழிவுக்கு கொண்டு வரும்” என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்


ஈரானின் இந்த கூற்றுக்கு பிறகு, இஸ்ரேல் மீண்டும்  தாக்குல் நடத்தியது. 2025 ஜூன் 13ஆம் தேதி இரவிலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  எனவே, இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்திய வருகின்றனர். இந்த பதற்றத்தை தணிக்க ரஷ்யா, அமெரிக்கா,  சீனா ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றனர்.

பதற்றத்திற்கு காணரம் என்ன?

இஸ்ரேலுக்கு ஈரானுக்கு பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது இந்த மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது, ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக இஸ்ரேலுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், ஈரோன் மின்சாரம் மற்றும் அறிவியலுக்காகவே அணு ஆயதத்தை தயாரிப்பதாக ஈரான் கூறி இருக்கிறது. இருப்பினும், ஈரான் ரகசியமாக பல ஆயத ஆயதங்களை தயாரித்து வருவதாக இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்தது.

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றால், அது இஸ்ரேலுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும். இதனால், அணு ஆயுதங்களை தயாரிக்க இஸ்ரேல் எதிர்த்து வருகிறது. இதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் எதிர்த்து தெரிவித்து வருகிறார். அமெரிக்க-ஈரான் இடையே அணுசக்தி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இருப்பினும், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பின்வாங்கியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சம்மந்தம் இல்லை என அமெரிக்கா கூறியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்...