Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுற்றுலா பயணிகளிடம் இருந்து 500 ரூபாய் கட்டை பிடுங்கி சேட்டை செய்த குரங்கு.. வைரலாகும் வீடியோ..

Viral Video: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் இடமிருந்து 500 ரூபாய் கட்டை பிடுங்கிச் சென்ற குரங்கு மரத்தின் மேல் அமர்ந்து ரூபாய் நோட்டுகளை காற்றில் பறக்கவிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் குரங்கின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளிடம் இருந்து 500 ரூபாய் கட்டை பிடுங்கி சேட்டை செய்த குரங்கு.. வைரலாகும் வீடியோ..
500 ரூபாயை பிடுங்கிச் சென்ற குரங்கு
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Jun 2025 18:56 PM

கொடைக்கானல்: தமிழகத்தில் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குவது கொடைக்கானலில் இருக்கக்கூடிய குணா குகை. கொடைக்கானலில் இருக்கக்கூடிய இந்த குணா குகை கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்திற்கு பின்பு மிகவும் பிரபலம் அடைந்தது. கொடைக்கானலுக்கு செல்லும் எல்லா மக்களும் தவறாமல் இந்த இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் தற்போது குணா குகைக்கு சென்ற சுற்றுலா பயணியிடம் இருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றை அங்கு இருக்கக்கூடிய குரங்கு ஒன்று பிடுங்கிச் சென்றுள்ளது பின்னர் அந்த குரங்கு மரத்தின் மேல் அமர்ந்து அந்த கட்டில் இருந்து ஒவ்வொரு ரூபாயாக காற்றில் பறக்க விடும் காட்சிகள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

மலைகளின் இளவரசி என என்று அழைக்கப்படுவது கொடைக்கானல். கொடைக்கானலில் குணா குகை, பைன் ஃபாரஸ்ட், ரோஸ் கார்டன், பூம்பாறை என பல இடங்கள் மிகவும் பிரபலமாக அறியப்பட்டது. கொடைக்கானலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா என பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் என்ற திரைப்படம் குணா குகையை தழுவி எடுக்கப்பட்டதாகும். அந்த படத்தில் இளைஞர் ஒருவர் குணா குகையில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு வேளிகளை தாண்டி செல்லும் பொழுது அங்கு இருக்கக்கூடிய டெவில்ஸ் கிச்சன் என்ற ஒரு குழிக்குள் தவறி விழுந்து அந்த இளைஞரை எவ்வாறு மீட்கின்றனர் என்பதே அந்த படத்தின் கதைகளாகும்.

500 ரூபாய் நோட்டை காற்றில் பறக்கவிடும் குரங்கு:


இந்த படத்தை தொடர்ந்து குணா குகைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்பது கணிசமாக உயர்ந்து இருப்பது நிதர்சனம். அந்த வகையில் ஜூன் 15 2025 தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் சுற்றுலாப் பயணிகளில் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து 500 ரூபாய் நோட்டு கட்டை கொத்தாக ஒரு குரங்கு பிடுங்கி சென்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரூபாய் நோட்டுகளை பிடுங்கிச் சென்ற குரங்கு மரத்தின் மேல அமர்ந்து அந்த கட்டில் இருந்து ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக குரங்கு வீசியதால் மீண்டும் அந்தப் பணம் சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்துள்ளது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்தவர்களாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!
ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!...
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?...
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!...
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!...
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!...
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !...
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!...
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்...
கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? சிறுநீரக நோயாக இருக்கலாம்!
கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? சிறுநீரக நோயாக இருக்கலாம்!...
சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!
சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!...
படிக்கட்டுகளுக்கு அடியில் கழிவறை வைக்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?
படிக்கட்டுகளுக்கு அடியில் கழிவறை வைக்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?...