பள்ளியில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை..

Jun 27, 2025 | 6:53 PM

தஞ்சாவூர் மாவட்டம் வீரசிங்கம்பேட்டையில் இருக்கக்கூடிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வீரசிங்கம்பேட்டையில் இருக்கக்கூடிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி நேரங்களில் மாணவர்கள் வகுப்புகளில் இருந்து இடைவேளை எடுத்து சாலையில் இருக்கும் பொது குடிநீர் குழாய் வரை சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us