பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த அமிருத் பாரத் ரயில் சேவைக்கு, திருச்சியில் மாணவர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் இந்த புதிய ரயில் சேவை, தென் மாநிலங்களுக்கிடையேயான பயண வசதிகளை மேம்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் வந்தடைந்ததும், பள்ளி மாணவர்கள், பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து பாரம்பரிய முறையில் வரவேற்பு வழங்கினர்.