சலால் அணையில் அதிகரிக்கும் நீர்மட்டம்.. மதகுகளை திறந்துவிட்டு நடவடிக்கை..

Jun 29, 2025 | 9:14 PM

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது அமைந்துள்ள சலால் அணையின் மதகுகளை அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர், இப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நீர் வரத்தை நிர்வகிப்பதற்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது அமைந்துள்ள சலால் அணையின் மதகுகளை அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர், இப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நீர் வரத்தை நிர்வகிப்பதற்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் செனாப் நதியின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.