தார் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்..
உத்திரமேரூர் அருகே உள்ள தார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து, தார் உருக்கும் பணியின் போது அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தார் கொழுந்துவிட்டு எரிவதால், வானுயர கரும்புகை எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்திரமேரூர் அருகே உள்ள தார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து, தார் உருக்கும் பணியின் போது அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தார் கொழுந்துவிட்டு எரிவதால், வானுயர கரும்புகை எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.