ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடிய பெண்.. வைரல் வீடியோ

Woman Dancing on Moving Train Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், ஆபத்தான முறையில் ஓடும் ரயிலில் படியில் தொங்கியப்படி ரீல்ஸ் வீடியோ எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாமக்கல் - நாகர்கோவில் விரைவு ரயிலில் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில்  படிக்கட்டில் நடனமாடிய பெண்.. வைரல் வீடியோ

ஆபத்தான முறையில் பயணம் செய்த பெண்

Updated On: 

02 Jun 2025 10:09 AM

கன்னியாகுமரி, ஜூன் 02 : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்றபடி, இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் முக்கிய பங்காற்றி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமாக விஷயங்கள் அதிகம் இருந்தாலும், மறுபக்கம் லைக்குகுளை பெறுவதற்காக உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில்  பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடிய பெண்

தங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணராமலும், குழந்தைகள் இந்த வீடியோவை பார்க்கம்போகும் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் உணராமலும் இன்றைய காலத்து இளைஞர்கள் மோசமான முறையில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஓடும் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும்போது இளைஞர்கள் பலரும் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர்.  ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி எல்லாம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.   இதுபோன்ற சம்பவங்களை தடுக்க  ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும், ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுப்பது தொடர் கதையாகி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் நம் தமிழகத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் என்று தெரியவந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த பெண் ஒருவர், ஓடும் ரயிலில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.  அந்த வீடியோவில், அந்த பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று, இரண்டு கம்பிகளை பிடித்து தொங்கி வருவது காட்டுகிறது.

மேலும், அந்த பெண்  ரயிலின் படிக்கட்டில் நின்று நடமாடியும் இருப்பதையும் வீடியோவில் காட்டுகிறது. இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து,  இளம்பெண் மீது நடவடிக்கை எடுத்து  பலரும் கூறி வருகின்றனர்.  இதனை அடுத்து, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.