வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!

Weather forecast: வட தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது.

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

19 Feb 2026 06:28 AM

 IST

சென்னை, பிப்ரவரி 19: தமிழகத்தில் நாளை (பிப்.20) முதல் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நாளை வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!

நாளை மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.19) வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (பிப்.20) தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் நாட்களில் கொட்டப்போகும் மழை:

தொடர்ந்து, பிப்.21, 22ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழையும், பிப்.23, 24ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

அதிகாலையில் பனிமூட்டம் நீடிக்கும்:

வட தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

வெப்பநிலை மாற்றம்:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், வரக்கூடிய நாட்களில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், படிப்படியாக உயரக்கூடும். அதாவது, வரக்கூடிய நாட்களில் இரவு நேர வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லாக்கரில் 2.7 கிலோ தங்கம் திருட்டு.. ஆன்லைன் சூதாட்டத்திற்காக அடமானம் வைத்த வங்கி உதவி மேலாளர்
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துகள்.. வியக்கும் உலக நாடுகள்..
பாக்கெட் பால் குடிக்கிறீர்களா?.. நீங்கள் குடிக்கும் பால் பாதுகாப்பானதுதானா?..
மிதிலாவின் 700 ஆண்டுகால ‘பஞ்சி’ திருமண மரபு: மங்கும் பாரம்பரியம், நிலைக்கும் அறிவியல்