மீண்டும் பொளக்கும் வெயில்.. அடுத்த 2 நாட்களுக்கு இப்படி தான்.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பொளக்கும் வெயில்.. அடுத்த 2 நாட்களுக்கு இப்படி தான்.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!

வெப்பநிலை

Updated On: 

20 Jun 2025 14:39 PM

சென்னை, ஜூன் 20 : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் (Tamil Nadu Heatwave) என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 மே மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மழையின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மே மாதம் முழுவதும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக மழை கொட்டித் தீர்த்தது. 2025 மே 30ஆம் தேதி வரை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து, அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது.

அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக மீண்டும் வெயில் பொளக்கக் தொடங்கி இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 ஜூன் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும் இருப்பினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி?


மேலும், 2025 ஜூன் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக் கூடும் எனவும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 20,21ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிககிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.