Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Fishing Ban : மீன்பிடி தடைக்காலம் நீங்கியது.. இன்று முதல் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி!

Tamil Nadu Fishing Season Reopens | தமிழகத்தில் ஏப்ரல் 15, 2025 முதல் ஜூன் 14, 2025 வரையிலான காலக்கட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஜூன் 17, 2025) முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

Fishing Ban : மீன்பிடி தடைக்காலம் நீங்கியது.. இன்று முதல் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 17 Jun 2025 07:14 AM

சென்னை, ஜூன் 17 : தம்கிழகத்தில் மீன்பிடி தடை காலம் (Fishing Ban) நீங்கி இன்று (ஜூன் 17, 2025) முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 15, 2025 முதல் ஜூன் 14, 2025 வரையிலான காலக்கட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், தற்போது தடை நீங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ள மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகலை தயார் நிலையில் வைத்துள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தடை நீங்கி இருப்பது அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு மாத காலம் அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15, 2025 முதல் ஜூன் 14, 2025 வரை, மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 2000-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க சொல்லாமல் கடந்த இரண்டு மாத காலங்களாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலை நீடித்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. மீன்பிடி தடை காலம் ஜூன் 14, 2025 அன்று நள்ளிரவே முடிவடைந்த நிலையில் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. மீன்பிடித்தலை காலம் முடிவடைந்து இருந்தாலும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மீன் பிடிக்க தயாரான படகுகள்

இந்த நிலையில் நேற்று (ஜூன் 16, 2025) விசைப்படகுகளில் மீன் பிடிக்க தேவையான பொருட்களை ஏற்றி, மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தயாராகினர். இன்று முதல் தமிழகத்தில் உள்ள பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மீன்வர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால்... கார்த்திக் சுப்பராஜ்
ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால்... கார்த்திக் சுப்பராஜ்...
இஸ்ரேல் - ஈரான் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு...
அலட்சியத்தால் விரலை இழந்த நபர்.. சாதாரணமாக விடப்படும் உடல்நலம்..!
அலட்சியத்தால் விரலை இழந்த நபர்.. சாதாரணமாக விடப்படும் உடல்நலம்..!...
கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இதை மறக்காம செய்யுங்க!
கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இதை மறக்காம செய்யுங்க!...
விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு - நடிகர் ரஜினிகாந்த்
விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு - நடிகர் ரஜினிகாந்த்...
கடகம் ராசியில் நுழையும் புதன்... நல்லகாலம் தேடி வரும் ராசிகள்!
கடகம் ராசியில் நுழையும் புதன்... நல்லகாலம் தேடி வரும் ராசிகள்!...
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா?
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா?...
திருச்செந்தூர் முருகனுக்கு எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் உருவான கதை
திருச்செந்தூர் முருகனுக்கு எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் உருவான கதை...
ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?
ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?...
புதுக்கோட்டை அரசு பள்ளி: சான்றிதழ் இல்லையா? தோப்புக்கரணம் போடுங்க
புதுக்கோட்டை அரசு பள்ளி: சான்றிதழ் இல்லையா? தோப்புக்கரணம் போடுங்க...
ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - முதல்வர்
ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - முதல்வர்...