ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்தது ஏன்? சிறுவன் கடத்தல் வழக்கு.. அடுக்கடுக்கான கேள்வி கேட்ட கோர்ட்!
Minor Abduction Case : சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பணியிடை நீக்கத்தை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசின் ஆலோசனை பெற்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை 2025 ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜூன் 18 : சிறுவன் கடத்தல் வழக்கில் (Minor Abduction Case)ஏடிஜிபி ஜெயராமின் (ADGP Jayaram) பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கும்போது, ஜெயராமை சஸ்பெண்ட் செய்தது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமை தமிழக அரசு 2025 ஜூன் 17ஆம் தேதியான நேற்று சஸ்பெண்ட் செய்தது. கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் தொடர்ந்து 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், தன்னுடைய கைதை ரத்து செய்ய வேண்டும் எனவும் தன்னை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிராகவும் ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு 2025 ஜூன் 18ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது.
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்தது ஏன்?
நீதிபதிகள் உஜ்ஜல் பூயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, அவரை ஏன் சஸ்பெண்ட் செய்தீர்கள்? அவர் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி. நீங்கள் இதைச் செய்ய முடியாது. இதுபோன்ற உத்தரவுகள் மன உறுதிகளை கெடுக்கின்றன.




அவரும் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார். அப்படி இருக்கையில், அவரை சஸ்பெண்ட் செய்வது அவருக்கு சரிசெய்ய முடியாத மனவேதனையை ஏற்படுத்தும். இந்த வகையான உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்.
அப்படி இருக்கும்போது ஏன் அவரை சஸ்பெண்ட் செய்தீர்கள். அவரது பணிநீக்கத்தை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசின் ஆலோசனைனை பெற்று பதிலளிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதனை அடுத்து, வழக்க 2025 ஜூன் 19ஆம் தேதி நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் கேள்வி
STORY | Kidnapping case: SC questions TN govt over suspension of ADGP after HC’s directive to arrest him
READ: https://t.co/bEFTnWbUvy pic.twitter.com/rSUIjuG19w
— Press Trust of India (@PTI_News) June 18, 2025
வழக்கின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டம் களப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (23). இவருக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான விஜயஸ்ரீ என்ற பெண்ணுடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். பின்னர், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த விவரம் பெண் விஜய்ஸ்ரீயின் தந்தை வனராஜுக்கு தெரியவந்தது. இந்த திருமணத்தில் பெண் வீட்டாருக்கு விருப்பம் இல்லாததால், கூலிப்படை மூலம் இளைஞர் தனுஷை கடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
இதனால், அவரது வீட்டிற்கு சென்றவர் அங்கு அவர் இல்லாததால், அவரது சகோதரரை கடத்தி சென்று சில மணி நேரங்கள் வைத்து பேருந்து நிறுத்ததில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, தனுஷின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, புரட்சி பாரதம் கட்சி தலைவரும். கே.வி.குப்பம் எல்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கடத்தலில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டட5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து, தனக்கும் இதற்கு தொடர்பு இல்லை என்று கூறியும், முன்ஜாமீன் கூறியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, இந்த வழக்கின் விசாரணையின்போது, ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதனை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி, அவரிடம் நீதிபதி விசாரணை கொண்டதை அடுத்து, ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.