Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பட்டாசு ஆலையில் வெடி விபத்தால் அதிர்ந்த சிவகாசி..! உயிரிழப்பு தவிர்ப்பு

Sivakasi Firecracker Factory Explosion: சிவகாசி அருகே அம்மாபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மே 25, 2025 அன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 5 கி.மீ. தூரம் வரை சத்தம் கேட்டது. தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். காலை நேரம் என்பதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்தால் அதிர்ந்த சிவகாசி..! உயிரிழப்பு தவிர்ப்பு
அதிகாலை பட்டாசு ஆலையில் வெடி விபத்துImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 25 May 2025 09:33 AM

விருதுநகர் மே 25: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் 2025 மே 25 இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ. தொலைவில் சத்தம் கேட்கப்பட்டதால் அக்கம் பக்கத்தினர் அச்சத்துடன் கூடினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். சம்பவ நேரம் காலை என்பதால் தொழிலாளர்கள் பணியில் சேராமல் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்திற்கான காரணம் மற்றும் உரிமம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெறும் இவ்வகை விபத்துகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

சிவகாசி அருகேயுள்ள அம்மாபட்டி கிராமத்தில் இயங்கி வந்த கணேஷ்வரி என்ற தனியார் பட்டாசு ஆலையில் 2025 மே 25 இன்று காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தின் சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளிலும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அக்கம் பக்கத்தவர்கள் அச்சமடைந்து சம்பவ இடத்திற்கு குவிந்தனர். வெடிவிபத்தால் சுற்றுவட்டாரத்தில் அதிர்வு உணரப்பட்ட நிலையில், உடனடியாக தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காலையில் விபத்து ஏற்பட்டதால் பணியாளர்கள் யாரும் இல்லை

அம்மாபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மே 25, 2025 அன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 5 கி.மீ. தூரம் வரை சத்தம் கேட்டது. தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். காலை நேரம் என்பதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்தின் காரணம் மற்றும் உரிமம் குறித்து விசாரணை நடக்கிறது. தொடர் விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

விபத்து நேரம் காலை அதனால் பணியாளர்கள் யாரும் தொழிலில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக ஒரு பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையின் உரிமையாளர் யார்? ஆலைக்கு உரிய உரிமம் பெறப்பட்டதா? என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக அதிகரிக்கும் வெட்டி விபத்து

சிவகாசியில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில், இவ்வாறு இடைக்கிடையாக நிகழும் வெடிவிபத்துகள் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த சில வருடங்களில் சில விபத்துகளில் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளன. இதனிடையே, சம்பவம் தொடர்பாக பதற்றமடைந்த பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பட்டாசு ஆலையிலுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உரிமையாளர்களுடன் அவ்வப்போது ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.