Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்க தொடரும் போராட்டம்!

Fire Accident in NLC | கடலூர் என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். பல மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்க தொடரும் போராட்டம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 11 May 2025 09:32 AM

கடலூர், மே 11 : கடலூர் அடுத்த நெய்வேலியில் உள்ள என்எல்சி (NLC – Neyveli Lignite Corporation) அனல்மின் நிலையத்தில் இன்று ( மே 11, 2025) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் (Transformer) ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பல மணி நேரமாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலையத்தில் இன்று ( மே 11, 2025) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக அனல்மின் நிலையம் முழுவதும் தீ பற்றியதாக கூறப்படுகிறது. அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியே புகை சூழ்ந்து இருட்டாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் தீயணைப்பு துறை

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே அனல்மின் நிலையத்தி தீ கொழுந்துவிட்டு எரிவதால், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அனல்மின் நிலையம் எரிந்து வரும் நிலையில் அங்கு கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி...