Train Cancelled : சென்னை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து!

Electric Trains Cancelled in Chennai | சென்னையை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் மின்சார ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்த நிலையில், நாளை (ஜூன் 19, 2025) சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில், எந்த வழித்தடத்தில் எந்த எந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Train Cancelled : சென்னை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Jun 2025 07:01 AM

 IST

சென்னை, ஜூன் 18 : சென்னை சென்ட்ரல் (Chennai Central) – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 19, 2025) மின்சார ரயில்கள் ரத்து (Electric Trains Cancel) செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. நாளை சில குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் ரத்து செய்யபப்டுவதாக  தெற்கு ரயில்வே தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நிலையில், மின்சார ரயில்கள் ரத்து குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது என்ன, எந்த எந்த நேரங்களில், எந்த எந்த வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யபப்டுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்

சென்னையை பொருத்தவரை ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். சென்னையின் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்தில் ஒருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மிக நீண்ட நேரம் ஆகும் என்பதாலும், மிக குறைந்த விலையில், விரைவாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும் என்பதால் மின்சார ரயில்கள் பலரின் தேர்வாக உள்ளது. இவ்வாறு சென்னை பொதுமக்களின் வாழ்வில் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கும் நிலையில், நாளை (ஜூன் 19, 2025) ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே, சென்னை சென்ட்ரல் கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 19, 2025) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 8, 8.35, 9, 9.30, 10.30 மதியம் 11.35, 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து காலை 9.55, 11.25, 11.45 மதியம் 12, 1, 2.30, 1.15, 3.10, 3.15 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..