கொளுத்தும் வெயில்.. 9 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இனி இப்படி தான் இருக்கும்..

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கொளுத்தும் வெயில்.. 9 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இனி இப்படி தான் இருக்கும்..

கோப்பு புகைப்படம்

Published: 

06 Jul 2025 13:55 PM

 IST

வானிலை நிலவரம், ஜூலை 6, 2025: தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர், அவலாஞ்சி, பார்வர்ட், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோவை மாவட்டம் சின்னகல்லார், சின்கோனா, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, சோலையார், மேல் பவானி உள்ளிட்ட இடங்களில் இரண்டு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 6 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையானது வரும் 2025 ஜூலை 12ஆம் தேதி வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:


இது ஒரு பக்கம் இருக்க வெப்பநிலையின் தாக்கமும் அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் சதமடித்த வெயில்:

தமிழகத்தின் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மழையின் தீவிரமானது வெகுவாக குறைந்த நிலையில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 38.3 டிகிரி செல்சியஸும், திருச்சியில் 38.5 டிகிரி செல்சியஸும், பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸும், கடலூரில் 38 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் பரமத்தியில் இயல்பை விட 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து பதிவாகியுள்ளது

Follow Us
Related Stories
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்