Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க வரும் மின்சார பஸ்கள்… ஒப்பந்தம் கோரல்

Chennai Gets 1225 Electric Buses:சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) 1225 மின்சார பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 625 பேருந்துகளுக்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக 600 (400 AC, 200 non-AC) பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 2025 ஆகஸ்ட் மாதத்துக்குள் திட்டம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க வரும் மின்சார பஸ்கள்… ஒப்பந்தம் கோரல்
மின்சார பஸ்கள் ஒப்பந்தம் கோரல் Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 24 Jun 2025 07:09 AM

சென்னை ஜூன் 24: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (Chennai Metropolitan Transport Corporation – MTC), மொத்தம் 1,225 மின்சார பஸ்கள் (Electric Bus Service) இயக்க திட்டம் மேற்கொண்டுள்ளது. அதில், முதற்கட்டமாக 625 பஸ்களுக்கு ஒப்பந்தம் முடிவடைந்தது. இப்போது இரண்டாவது கட்டமாக 600 மின்சார தாழ்தள பஸ்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதில் 400 ஏ.சி மற்றும் 200 ஏ.சி அல்லாத பஸ்கள் அடங்கும். இந்த ஒப்பந்தத்திற்குப் பல நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. 2025 ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒப்பந்தம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது (scheduled to be completed by August).

மாசு கட்டுப்பாட்டுக்கும் வசதிக்கும் மின்சார பஸ்கள் திட்டம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், காற்று மாசைப் பாதிப்பை குறைக்கும் நோக்கத்துடன், மின்சார பஸ்கள் சேவையை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் வசதியானதும் உள்ள போக்குவரத்து கிடைக்கும்.

முதற்கட்டம்: 625 பஸ்களுக்கு ஒப்பந்தம் நிறைவு

மொத்தம் 1,225 மின்சார பஸ்கள் திட்டத்தில், முதல்கட்டமாக 625 பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் இயக்க ஒப்பந்தம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 400 ஏ.சி அல்லாத பஸ்கள் மற்றும் 225 ஏ.சி பஸ்கள் உள்ளன.

ஓம் குளோபல் மொபிலிட்டியின் பங்கு முக்கியமானது

இந்த முதல்கட்ட ஒப்பந்தம் அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன் கீழ் ஏற்கனவே பஸ்கள் இயக்கத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாவது கட்டம்: 600 பஸ்களுக்கு புதிய ஒப்பந்தம்

தற்போது 2-வது கட்டமாக 600 மின்சார தாழ்தள பஸ்கள் (400 ஏ.சி, 200 ஏ.சி அல்லாதவை) சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரல் நடத்தப்பட்டு வருகிறது.

போட்டியில் நான்கு நிறுவனங்கள்

இந்த புதிய ஒப்பந்தத்திற்கான போட்டியில் ஓம் குளோபல் மொபிலிட்டியுடன், ஈவி டிரான்ஸ், ஈகிள் கன்ஸ்டிரக்ஷன் மற்றும் டிராவல்டைம் மொபிலிட்டி இந்தியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

2025 ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒப்பந்த முடிவு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) 1225 மின்சார பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 625 பேருந்துகளுக்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக 600 (400 AC, 200 non-AC) பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இந்த இரண்டாவது கட்ட ஒப்பந்தத்தை 2025 ஆகஸ்ட் மாதத்துக்குள் இறுதிசெய்ய நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன என்று மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (Chennai Metropolitan Transport Corporation – MTC) என்பது தமிழக அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு பொது போக்குவரத்துத் நிறுவனம் ஆகும். இது சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கான பேருந்து சேவையை வழங்குகிறது. இதன் வாயிலாக பொதுமக்களுக்கு குறைந்த செலவில் பயண வசதிகளை அரசு தருகிறது.