Aviva Baig : பிரியங்கா காந்தியின் மருமகள் இவர்தானா? யார் இந்த அவீவா பெய்க்?

Who Is Aviva Baig : பிரியங்கா காந்தி மகன் ரெஹான் வதேராவுக்கு டெல்லியைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் அவிவா பெய்க் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் யார் அந்த பெண் என்றும், திருமணம் எப்போது இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Aviva Baig : பிரியங்கா காந்தியின் மருமகள் இவர்தானா? யார் இந்த அவீவா பெய்க்?

பிரியங்கா மற்றும் அவீவா பெய்க்

Updated On: 

30 Dec 2025 14:05 PM

 IST

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேராவின் மகனான ரெஹான் வதேராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெஹான் தனது டெல்லியைச் சேர்ந்த காதலி அவிவா பெய்க் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த விழா ஒரு தனிப்பட்ட விழாவாக நடந்துள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

யார் இந்த அவீவா பெய்க்?

ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மாடர்ன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் மீடியா கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசத்தில் பட்டம் பெற்றார். அவீவா பெய்க் ஒரு முன்னாள் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனை. தனது புகைப்படம் மூலம் சொல்லப்படாத கதைகளைப் படம்பிடித்து நாடு முழுவதும் பயணம் செய்கிறார்.

Also Read : ஓலா-உபர், ராபிடோக்கு இணையாக…நாடு முழுவதும் களமிறங்கும் பாரத் டாக்ஸி…பல்வேறு முக்கிய வசதிகள்!

இன்ஸ்டா பக்கம்

இந்தியாவில் உள்ள ஏஜென்சிகள், பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்படும் ஒரு புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனமான Atelier 11 இன் இணை நிறுவனர் அவீவா ஆவார். அவரது படைப்புகள் அன்றாட வாழ்வில் எளிமை மற்றும் சிக்கலான தன்மையின் குறுக்குவெட்டை ஆராய்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர் You Can’t Miss This (2023), India Art Fair’s Young Collectors Program இன் ஒரு பகுதியாக You Can’t Miss This (2023), The Quorum Club’s The Illusory World (2019) மற்றும் India Design ID, K2 India (2018) ஆகியவற்றில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

Also Read: டிசம்பர் 31-ல் கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட ஊழியர்கள் எடுத்த முக்கிய முடிவு

ரெஹான் வத்ரா

ரெஹான் வதேராவும் ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். அவர் 10 வயதிலிருந்தே தனது கேமரா லென்ஸ் மூலம் உலகைப் படம்பிடித்து வருகிறார். 2021 ஆம் ஆண்டில், ரெஹான் வத்ரா தனது முதல் தனி கண்காட்சியான “டார்க் பெர்செப்சன்” ஐ புது தில்லியில் உள்ள பிகானீர் ஹவுஸில் நடத்தியுள்ளார், இந்த கண்காட்சியில், 2017 ஆம் ஆண்டு பள்ளி கிரிக்கெட் போட்டியின் போது கண்ணில் காயம் ஏற்பட்ட பிறகு ஒளி, இடம் மற்றும் நேரம் குறித்த தனது அனுபவங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். அதில் “கண் விபத்துக்குப் பிறகு, நான் நிறைய கருப்பு வெள்ளை படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அது என் பார்வையை மாற்றியது, ஒளியைக் கண்டுபிடிக்க இருள் என்ற கருத்தைப் பயன்படுத்தினேன்” என்றார்.

Related Stories
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெண் பக்தரை பாம்பு கடித்ததால் பரபரப்பு!
துப்பாக்கி முனையில் மணப்பெண்ணை கடத்திச் சென்ற முன்னாள் காதலன்.. பகீர் சம்பவம்!
அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வயிற்றில் தங்கம் கடத்தி வந்த நபர்.. சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
“மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!
இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்… ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!
லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!