Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karachi Under Naval Attack : பாகிஸ்தானுக்கு பலத்த அடி – கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!

Indian Navy Targets Karachi : பாகிஸ்தான் (Pakistan) மீது இந்தியா (India) தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கராச்சியில் கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Karachi Under Naval Attack : பாகிஸ்தானுக்கு பலத்த அடி – கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 09 May 2025 01:15 AM

பாகிஸ்தான் (Pakistan) மீது இந்தியா (India) தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் ஜம்முவின் அனைத்துப் பகுதிகளிலும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்குப் பிறகு, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் அதன் முயற்சி தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. இந்திய பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியது. இந்த இடங்களில் எந்த சேதமும் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை.

கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை தாக்குதல்

இந்த நிலையில்  தற்போது கிடைத்த தகவலின் படி பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.  வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடற்படைத் தாக்குதலைத் தொடங்கியது. கராச்சியில் கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் கராச்சி துறைமுகத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் இல்லத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஷாபாஸ் ஷெரீப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா இரண்டு பாகிஸ்தான் விமானிகளை காவலில் எடுத்ததாக கூறப்படுகிறது. ஜெய்சால்மர் மற்றும் அக்னூரில் விமானிகள் காவலில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, எல்லைப் பாதுகாப்புப் படைகளின் டைரக்டர் ஜெனரல்களுடன் பேசி, நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார். மேலும், விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சிஐஎஸ்எப் டிஜியுடன் (CISF DG) தனியாகவும் ஆலோசனை நடத்தினார்.

இந்திய ராணுவம், பாகிஸ்தான் விமானப்படையின் F-16 சூப்பர்சோனிக் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த F-16 விமானத்தை, உலகின் முன்னணி ஆயுத உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் உருவாக்கியுள்ளது. நான்காவது தலைமுறை போர் விமானங்களில் ஒன்று என கருதப்படும் இந்த விமானம், இன்று பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டது.

இந்த F-16 போர் விமானம் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியிருக்கிறது.  இந்த விமானம், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் வடிவமைத்ததாகும். உலகின் நான்காவது தலைமுறை போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படும் இதை, இன்று பாகிஸ்தான் பயன்படுத்தியது. ஆனால், இந்திய இராணுவம் மிகக் குறுகிய நேரத்திலேயே அதனை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்குமுன்னர், 2019-ல் நடைபெற்ற பாலகோட் வான்வழித் தாக்குதலின்போது, இந்தியா ஒரு F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியிருந்தது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம்.. ஐபிஎல்லை ரத்து செய்ய பிசிசிஐ
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம்.. ஐபிஎல்லை ரத்து செய்ய பிசிசிஐ...
கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!
கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!...
ராஜஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை விமானி கைது!
ராஜஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை விமானி கைது!...
பாகிஸ்தானின் லாகூரை குறி வைத்த இந்தியா.. பதிலடி தொடக்கம்!
பாகிஸ்தானின் லாகூரை குறி வைத்த இந்தியா.. பதிலடி தொடக்கம்!...
அழுத்ததால் ரோஹித் சர்மா ஓய்வா..? விளக்கம் தந்த பிசிசிஐ..!
அழுத்ததால் ரோஹித் சர்மா ஓய்வா..? விளக்கம் தந்த பிசிசிஐ..!...
LIVE :பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி? சரக்கு விமானத்தால் சர்ச்சை
LIVE :பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி? சரக்கு விமானத்தால் சர்ச்சை...
வெட்டப்பட்ட தர்பூசணியை பிரிட்ஜில் வைப்பதால் ஆபத்தா?
வெட்டப்பட்ட தர்பூசணியை பிரிட்ஜில் வைப்பதால் ஆபத்தா?...
பாகிஸ்தான் விமானப்படையின் F-16 விமானம்.. சுட்டு வீழ்த்திய இந்தியா
பாகிஸ்தான் விமானப்படையின் F-16 விமானம்.. சுட்டு வீழ்த்திய இந்தியா...
ராஜஸ்தானை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய இந்தியா
ராஜஸ்தானை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய இந்தியா...
ஜம்மு விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி!
ஜம்மு விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி!...
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி எப்போது?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி எப்போது?...