Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs Pakistan Live Updates: இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

India vs Pakistan War Tension : ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது இந்நிலையில் இன்று இரவு முதல் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக ஜம்முகாஷ்மீர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் இந்தியா முறியடித்துள்ளது

chinna-murugadoss
C Murugadoss | Updated On: 10 May 2025 17:01 PM
India vs Pakistan Live Updates: இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்

மே 08, 2025 நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் அதனை முறியடித்து உள்ளது. அதாவது பாகிஸ்தானின் தாக்குதலை S-400 பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்பு பல்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் வெவ்வேறு உயரங்களில் தாக்கும் திறன் கொண்டது. அதிநவீன ரேடார் மற்றும் இடைமறித்து தாக்கும் தொழில்நுட்பங்களை கொண்டது என்பதால் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளது.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 May 2025 03:28 PM (IST)

    உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

    இந்தியாவின் 26 இடங்களில் நடந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏழு பாகிஸ்தான் ராணுவ தளங்களை இந்தியா அழித்த நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • 10 May 2025 02:01 PM (IST)

    இந்தியா – பாகிஸ்தான் போர் எதிரொலி: ஹஜ் விமானங்கள் ரத்து

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, மே 14 வரை ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • 10 May 2025 01:37 PM (IST)

    இந்தியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் விவரம் வெளியீடு

    பாகிஸ்தானில் மே 7 அன்று இந்தியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முடாசர் காதியன் காஸ் என்ற முடாசர் என்ற அபு ஜுண்டல், ஹபீஸ் முகமது ஜமீல், முகமது யூசுப் அசார் என்ற உஸ்தாத் ஜி என்ற முகமது சலீம் என்ற கோசி சஹாப், காலித் என்ற அபு ஆகாஷா,முகமது ஹசன் கான் ஆகியோர் விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளது.

  • 10 May 2025 01:25 PM (IST)

    ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் பொக்ரானில் ஊரடங்கு பிறப்பிப்பு

    ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் பொக்ரானில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக உளவுத்துறையிலிருந்து தகவல் கிடைத்ததால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  • 10 May 2025 12:41 PM (IST)

    பதற்றத்தைத் தணிக்க நேரடி பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தல்

    வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணிக்க நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.

  • 10 May 2025 11:04 AM (IST)

    பாகிஸ்தான் நடவடிக்கை.. பொறுப்புடன் கையாண்ட இந்தியா!

    கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நான் பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் மிக தீவிரமாகவும், கோபத்தை தூண்டும் வகையிலும் இருக்கிறது என்று கூறியுள்ளேன். அதனை இந்தியா பொறுப்புடன் கையாண்டு எதிர்வினையாற்றியுள்ளது என விக்ரம் மிஸ்ரி கூறினார்.

  • 10 May 2025 10:25 AM (IST)

    பாகிஸ்தான் ராணுவத் தளபதியை தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில் பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை அழைத்து பேசியுள்ளார்.

  • 10 May 2025 09:30 AM (IST)

    அதிகாலையில் நடந்த குண்டு வெடிப்பு.. பதறிப்போன பஞ்சாப் குருதாஸ்பூர் மக்கள்

    பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தின் ராஜு பேலா சிச்ரா கிராமத்தில் அதிகாலை 4.45 மணிக்கு ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அங்குள்ள ஒரு காலியான வயலில் 40 அடி நீளமும் 15 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பின் சத்தத்தால் கிராம மக்கள் பீதியடைந்தனர். மேலும் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் உடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

  • 10 May 2025 08:58 AM (IST)

    அடுத்த 48 மணி நேரத்திற்கு பெட்ரோல் நிலையங்கள் மூடல்

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 10 May 2025 08:17 AM (IST)

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

    இந்தியா மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On - May 08,2025 10:19 PM

ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!...
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!...
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!...
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!...
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!...
இரவெல்லாம் ஏசி ஓடினாலும் EB பில் கம்மியா வரணுமா? - இத பண்ணுங்க!
இரவெல்லாம் ஏசி ஓடினாலும் EB பில் கம்மியா வரணுமா? - இத பண்ணுங்க!...