Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: இம்முறை உயர்வு குறைந்ததற்கு காரணம் என்ன?

DA Hike 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 2025 ஜனவரி 1 முதல் 2சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த முறையை விட அகவிலைப்படி உயர்வு குறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: இம்முறை உயர்வு குறைந்ததற்கு காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 25 Jun 2025 19:39 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு பக்கம் அகவிலைப்படி (DA) 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 53 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பக்கம் 8வது ஊதியக்குழு (8th Pay Commission) அமைப்பில் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகிய இரண்டும் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2025, மார்ச் மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் பயனடையவுள்ளனர்.

இந்த முறை அகவிலைப்படி குறைந்ததற்கு காரணம் என்ன?

இந்திய நாட்டின் சில்லறை விலை உயர்வு (Retail Inflation) கடந்த 6 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்துள்ளது. இது தற்போது 2.82 சதவிகிதம் ஆகக் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் வீழ்ச்சி குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இது 2.57 சதவிகிதமா இருந்துள்ளது.

ரெப்போ ரேட்டை குறைத்த குறைத்த ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி 2025, ஜூன் மாதத்தில் ரெப்போ வங்கி விகிதத்தை 0.50 சதவிதம் அளவுக்கு குறைத்தது. இதனால் தற்போது ரெப்போ விகிதம் 5.50 சதவிதமாக உள்ளது.

2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமைக்கப்படுமா?

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் 8வது ஊதியக் குழுவின் விதிமுறைகள், தலைவர் நியமனம் போன்ற பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது 2025, ஜூன் மாதம் முடிவடையவிருக்கிற நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் 2026 ஜனவரியில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை மத்திய அரசு பணியாளர்களிடையே குறைந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  ஆனால், 8வது ஊதியக்குழு அறிவிப்பு தாமதமாகி வரும் நிலையில், ஊதிய உயர்வு எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இப்போது இருந்து வரும் அகவிலைப்படி உயர்வுகள் அனைத்தும் 7வது ஊதியக்குழு அடிப்படையில் தான் அமலுக்கு வருகிறது. அடுத்த புதிய மாற்றங்கள் மற்றும் ஊதிய நிர்ணயங்கள் 8வது ஊதியக் குழுவினால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர்.