லைக்கா நிறுவனத்துக்கு ரூ.21 கோடி செலுத்த வேண்டும் – விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Vishal Legal Trouble : தயாரிப்பாளர் அன்பு செழியனுக்கு தர வேண்டிய பணம் தொடர்பாக லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் ரூ.21 கோடியை வட்டியுடன் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமே வாகை சூடும் படத்தை தனிச்சையாக விஷால் வெளியிட்டதன் காரணமாக லைக்கா நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

மத கஜ ராஜா படத்தின் எதிர்பாராத வெற்றிக்கு பிறகு நடிகர் விஷாலின் (Vishal) புதிய படங்கள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவர் துப்பறிவாளன் 2 (Thupparivalan 2) படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லைக்கா புரொடக்ஷன் (Lyca Productions) சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷால் ரூ. 21 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனது படத் தயாரிப்புக்காக தயாரிப்பாளர் அன்பு செழியனிடம் விஷால் கடன் பெற்றதாக தொடர்பாக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தனது படத் தயாரிப்புக்காக தயாரிப்பாளர் அன்பு செழியனிடம் விஷால் கடன் பெற்றதாக தொடர்பாக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நடிகர் விஷால் ரூ.21 கோடியே 29 லடச்தத்தை 30 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் வழக்கு செலவு தொகையையும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.
வழக்கின் பின்னணி
நடிகர் விஷால் தயாரிப்பாளர் அன்பு செழியனிடம் பெற்ற கடன் தொகையை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் செலுத்தியிருக்கிறது. இதற்காக லைக்கா நிறுவனத்துகக்கும் விஷாலுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது படமான வீரமே வாகை சூடும் படத்தை விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக வெளியிட்டதாக கூறப்படுகிறது. விஷால் ஒப்பந்தத்தை மீறியதால் அவர் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த தீரப்பு நடிகர் விஷாலுக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிரது.
மத கஜ ராஜா வெற்றி குறித்து விஷால்
Well it’s time to share with you all, who were behind the release of #MadhagajaRaja for this #Pongal2025, The pillars of strength who made this magic happen, at the box office even though being a 12year old film which has never happened ever before in world cinema, starting from… pic.twitter.com/HAa4PLmMal
— Vishal (@VishalKOfficial) February 5, 2025
விஷாலின் திருமணம்
நடிகர் விஷால் சமீபத்தில் யோகி டா பட விழாவில் தானும் சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தங்களது திருமணம் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்தார். இதனையடுத்து பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். விஷாலின் திருமணம் குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் அடிபட்டு வந்த நிலையில் அவரே திருமண அறிவிப்பை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
விஷால் சமீபத்தில் வெளியான படங்கள் வியாபார ரீதியாக தோல்வியடைந்த நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன் உருவான மத கஜ ராஜா திரைப்படம் ஜனவரி 13, 2025 அன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. மக்கள் கமர்ஷியல் படங்களை விரும்புவதை மத கஜ ராஜாவின் வெற்றி உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.