Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் அதிரடி ஆக்ஷ்ன் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங் ஓவர்!
Madharasi Film Shooting Wraped : தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம், பான் இந்திய நடிகராகப் பார்க்கப்படுபவர் சிவகார்த்திகேயன். இவரின் முன்னணி நடிப்பில் பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்கள் உருவாகி வந்தது. இதில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வந்த பராசக்தி படத்தின் ஷூட்டிங் நிறுவடைந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு வெளியான அமரன் (Amaran) படத்தின் மூலம் பான் இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமானவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கத்தில் இவர் நடித்துவந்த படம்தான் மதராஸி (Madharasi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நீண்ட நாளுக்குப் பின் தமிழில் உருவாகிவரும் படமாக மதராஸி அமைந்துள்ளது. இந்த படத்திற்கு முன் இந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த பாடமானது பெரும் தோல்வியைச் சந்தித்து. இந்த படத்தைப் படத்தை தொடர்ந்துதான் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை இயக்கிவந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, மே தொடக்கம் முதல் ஸ்ரீலங்காவில் நடந்துவந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது தினத்தந்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.




மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
#Madharasi #MadharasiFromSep5 😊👍 pic.twitter.com/qVRIFNHTUc
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 14, 2025
சிவகார்த்திகேயனின் இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023 ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளிலும் நடந்து வந்தது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நிலையில், இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டும் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2025, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இந்த படத்தின் மீதம் இருக்கும் காட்சிகளைப் படமாக்க, படக்குழு ஸ்ரீலங்காவிற்குச் சென்றிருந்தது. பராசக்தி பட ஷூட்டிங்கும் அங்கே நடந்துவரும் நிலையில், மதராஸி படக்குழுவும் இறுதி ஆக்ஷ்ன் காட்சிகளை ஷூட்டிங் செய்ய இலங்கைக்குச் சென்றது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. படக்குழு இதைப் பற்றி அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5 தேதி முதல், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.