Magalir Urimai Thogai : ஜூன் 4-ல் 9,000 இடங்களில் மகளிர் உரிமைத் தொகை முகாம்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
Kalaignar Magalir Urimai Thogai Scheme Camps | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் முகாம்கள் மே 29, 2025 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் சுமார் 9,000 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முகாம்கள் மே 29, 2025 முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கலைஞர் மகளிரி உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஒரே நாளில் 9,000 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சிறப்பு முகாம்கள் என்று நடைபெற உள்ளது, அதன் மூலம் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைந்து வரும் பெண்கள்
2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையின் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி, திராவிட முன்னேற்ற கழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பயண்டைந்து வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய பயனர்களை இணைப்பதற்கான முகாம்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், தற்போது ஒரே நாளில் 9,000 இடங்களில் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர்
விடுபட்டவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஜூன் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவையில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்#TNAssembly pic.twitter.com/KOf34SAW8d
— DMK (@arivalayam) April 25, 2025
ஒரே நாளில் 9,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம்கள்
ஜூன் 4, 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 9,000 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் நிலையில், உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பத்தை நிறப்பி உரிய ஆவணங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- ரேஷன் அட்டை
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- வங்கி கணக்கு புத்தகம்
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க செல்லும் பெண்கள் தங்களுடன் மேற்குறிப்பிட்ட இந்த ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.