EPFO : விரைவில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0.. இனி எல்லாமே ஈஸி தான்!

EPFO 3.0 Scheme Will Launch Soon | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ சேவைகளை மக்கள் எளிதாக அணுகும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

EPFO : விரைவில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0.. இனி எல்லாமே ஈஸி தான்!

மாதிரி புகைப்படம்

Published: 

31 May 2025 13:07 PM

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வரபிரசாதமாக உள்ள அம்சம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இதன் மூலம் ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. ஊழியர்கள், நிதி சவால்களை எதிர்கொள்ளாத வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

முன்னதாக பிஎஃப் பணத்தை எடுக்க ஊழியர்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) திட்டத்தின் மூலம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் சேவைகள் மேலும் எளிதாக உள்ளது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ 3.0-ல் என்னென்ன புதிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது, அது எப்போது முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 திட்டம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 3.0 ஜூன் 2025-ல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 3.0 2025 மே அல்லது ஜூன் மாதத்தில் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அது அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் ஊழியர்களின் சிரமங்கள் பாதியாக குறைக்கப்பட்டு மிக எளிதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் அம்சங்களை அணுக முடியும் என கூறப்படுகிறது.

இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

  • இந்த புதிய இபிஎஃப்ஓ 3.0 மூலம் ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை விருப்பமான வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
  • ஊழியர்கள் தங்களது பிஎஃப் இருப்பை யுபிஐ மூலமே சரிப்பார்த்துக்கொள்ளலாம்.
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பணம எடுக்க விரும்பும் ஊழியர்கள் இனி ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள் மூலமே சுலபமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் மூலம் ஊழியர்கள் இந்த சிறப்பு அம்சங்களை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.