Sowmya Anbumani: ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு வழிபாடு

| Edited By: Apurva Prakash

| Jun 17, 2025 | 1:57 PM

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணியின் மனைவி சௌமியா மற்றும் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் ராமேஸ்வரத்தில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அப்போது தாம்பூல தட்டில் பாமகவின் சின்னமான மாம்பழம் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அங்கிருந்த அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணியின் மனைவி சௌமியா மற்றும் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் ராமேஸ்வரத்தில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அப்போது தாம்பூல தட்டில் பாமகவின் சின்னமான மாம்பழம் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அங்கிருந்த அம்மியில் மஞ்சள் அரைத்து நம்பு நாயகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சமீபகாலமாக பாமகவில் நிலவி வரும் பிரச்னைகள் சரியாக இந்த வழிபாடு சௌமியா அன்புமணியால் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Published on: Jun 17, 2025 12:59 PM