கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மீட்பு நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. கோயம்புத்தூர் அருகே உள்ள குப்பனூர் கிராமம் அருகிலுள்ள விவசாய நிலத்தில், சேற்றில் சிக்கி தவித்த பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டனர். தற்போது யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது.