‘தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் பேட்டி

| Oct 08, 2025 | 12:49 PM

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் எனவும், மத்திய அரசு மட்டுமில்லாமல், மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நெல்லை, அக்டோபர் 08 : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நேரில் ஆய்வு செய்து அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, தாமிபரணி நதியை பாதுகாக்க தவறிய தமிழக அரசு மற்றும் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் எனவும், மத்திய அரசு மட்டுமில்லாமல், மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Published on: Oct 08, 2025 12:48 PM