Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளதா?.. சுலபமாக அதிகரிக்க சில சிம்பிள் டிப்ஸ் இதோ!

How to Improve Credit Score | வங்கிகளில் கடன் பெற வேண்டும் என்றால் கிரெடிட் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், குறைவாக உள்ள கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளதா?.. சுலபமாக அதிகரிக்க சில சிம்பிள் டிப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 21 Mar 2025 15:09 PM

பொதுமக்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் கேட்கும் முக்கியமான விஷயம் என்றால் எது கிரெடிட் ஸ்கோர் (Credit Score) தான். ஒருவருக்கு வங்கி கடன் (Bank Loan) வழங்க வேண்டும் என்றால் அந்த நபர், முறையாக கடனை திருப்பிச் செலுத்துவாரா, இதற்கு முன்னதாக ஏதேனும் கடன் வாங்கி அதனை கட்டாமல் வைத்துள்ளாரா என்பதை எல்லாம் சோதனை செய்வது அவசியம். ஆனால், ஒவ்வொரு தனி நபரையும் கண்காணித்து இந்த தகவல்களை சேகரிக்க முடியாது. எனவே தான் இந்த கிரெடிட் ஸ்கோர் அம்சம் பயன்பாட்டில் உள்ளது.

வங்கி கடன் வாங்க கிரெடிட் ஸ்கோர் மிகவும் அவசியம் – ஏன் தெரியுமா?

கிரெடிட் ஸ்கோர்கள் மூலம் ஒருவரின் கடன் விவரங்களை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். அதாவது, ஒருவர் எந்த வித பிரச்சனைகளும் இன்றி முறையாக வங்கி கடன்களை திருப்பி செலுத்தி வருகிறார் என்றால் அவரது கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும். இதுவே ஒருவர் கடன்களை முறையாக திருப்பி செலுத்தாமல், காலம் தாழ்த்தி கடனை திருப்பி செலுத்துகிறார் என்றால் அவரது கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கும். இதன் மூலம் வங்கிகள் அந்த நபருக்கு கடன் தர வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.

இந்த நிலையில், கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள நபர்கள் சில யுக்திகளை கையாளுவதன் மூலம், தங்களது கிரெட் ஸ்கோரை உயர்த்த முடியும். அதன் மூலம் அவர்களுக்கு மிக எளிதில் வங்கி கடன் கிடைத்துவிடும். இந்த நிலையில், கிரெடிட் ஸ்கோரை மிக சுலபமாக அதிகரிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி?

  1. முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாக தான் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு CRIF (Centre for Research in International Finance) கடன் அறிக்கையை சரிப்பார்க்க வேண்டும்.
  2. நீங்கள் மாத தவணைகளை கால தாமதமாக செலுத்தி வருகிறீர்கள் என்றால் அதனை உரிய தேதிக்குள் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
  3. கடனை அதிகரித்துக்கொண்டே செல்வதை தவிர்ப்பது அவசியம் ஆகும். ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் இருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு கடன்களை வைத்திருப்பது இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
  4. நீங்கள் நிலுவையில் வைத்துள்ள கிரெடிட் கார்டு பில் மற்றும் மாத தவணைகளை உடனடியாக செலுத்துங்கள்.
  5. வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டால், உடனே மீண்டும் மீண்டும் விண்ணப்பம் செய்யாதீர்கள். குறைந்தது 6 மாத கால இடைவெளிக்கு பிறகு விண்ணப்பியுங்கள்.

மேற்குறிப்பிட்ட யுக்திகளை கையாளுவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சீராக பராமரிக்க முடியும். கிரெடிட் ஸ்கோர் வங்கி கடன் வாங்குவதற்கு மட்டுமன்றி, நிதி தொடர்பான பல விவகாரங்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கிரெடிட் ஸ்கோரை முறையாக பராமரிப்பது கட்டாயமாகிறது.

பீப் சாங் பிரச்னையில் இருந்த போது ரஹ்மான் செய்த செயல் - சிம்பு
பீப் சாங் பிரச்னையில் இருந்த போது ரஹ்மான் செய்த செயல் - சிம்பு...
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!...
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!...
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!...
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!...
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ...
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!...
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!...
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்...
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!...
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?...