Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Class 12th Supplementary Exam : 12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது?.. அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

12th Supplementary Exams from June 26, 2025 | 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், துணை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 26, 2025 முதல் துணை தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Class 12th Supplementary Exam : 12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது?.. அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 08 May 2025 12:10 PM

சென்னை, மே 08 : தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் (12th Board Exam Result) வெளியாகியுள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வு (Supplementary Exam) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வியடைந்துள்ள மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெரும் வகையில், ஜூன் 26, 2025 முதல் துணை தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு துணை தேர்வு குறித்து அமைச்சர் அறிவித்துள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் மார்ச் 03, 2025 முதல் மார்ச் 25, 2025 வரை 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (மே 08, 2025) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் சுமார் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 7,92,494 மாணவர்களில் 7 ,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 3,47,670, மற்றும் மாணவிகள் 4,05,472 தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டை வித இந்த ஆண்டு 0.47 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

12 ஆம் வகுப்புக்கு துணை தேர்வு எப்போது – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08, 2025) காலை 9 மணிக்கு வெளியான நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜூன் 26, 2025 முதல் துணை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். துணை தேர்விற்கு மே 13, 2025 முதல் மே 31, 2025 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மே 12 முதல் மதிப்பெண் பட்டியலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மே 12, 2025 முதல் மதிப்பெண் பட்டியலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவச் செல்வங்கள் தங்களது விடைத்தாள் நகலினைப் பெறுவதற்கு மே 13, 2025 முதல் மே 17, 2025 வரை தங்கள் பள்ளிகளின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!...
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு...
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!...
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?...
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!...
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் ..
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் .....
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!...
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?...
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?...
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?...