தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் 2025 மே 30ஆம் தேதியான இன்று மிக கனமழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்... கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?

மழை

Updated On: 

30 May 2025 07:09 AM

சென்னை, மே 30 : தமிழகத்தில் 2025 மே 30ஆம் தேதியான இன்று பல்வேறு மாவட்டஙகளில் கன முதல் மிக கனமழை (tamil nadu weather update) பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துளளது. சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் இரு நாட்களாக மூடப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு மழை தீவிரமாக இருந்தது. தென்கிழக்கு பருவமழை தென்மாநிலங்கள் முழுவதும் தொடங்கியதை அடுத்து, மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சென்னையிலும் மழை பெய்து வருகிறது.

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

நீலகிரி சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால், அங்கு மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதாவது, ஓடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்கம் வங்கதேச கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்றது.

இது அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காளம் வங்கசேத கடற்கரை பகுதிகளில் 2025 மே 30ஆம் தேதி கரையை கடக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் வானிலை நிலவரம்


2025 மே 30ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், 2025 மே 30ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 2025 மே 30ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. 2025 மே 30ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.