பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதலமைச்சர்!

Train Hit School Bus in Cuddalore | கடலூரில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ.1 லட்சமும் அறிவித்துள்ளார்.

பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதலமைச்சர்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Jul 2025 11:09 AM

 IST

கடலூ, ஜூலை 08 : கடலூரில் (Cuddalore) பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

பள்ளி பேருந்து மோதிய ரயில் – 3 மாணவர்கள் பலி

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்த போது ரயில் மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தர். பள்ளி பேருந்தில் மொத்தம் 4 மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என 6 பேர் பயணம் செய்த நிலையில், 6 வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்துள்ள 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர, உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

அதன்படி விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..