கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா: பூசாரியால் தாலி கட்டும் விழா கோலாகலம்..!

Koothaandavar Temple Festival:கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அரவான் கண் திறத்தல் விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர். திருமாங்கல்யம் ஏற்றுக் கொண்ட திருநங்கைகள் பக்தியுடன் வழிபட்டனர். தேரோட்டம், களப்பலி போன்ற பிற நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா: பூசாரியால் தாலி கட்டும் விழா கோலாகலம்..!

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா

Published: 

14 May 2025 08:00 AM

கள்ளக்குறிச்சி மே 14: கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi District) கூவாகம் கிராமத்தில், கூத்தாண்டவர் கோவிலில் (Koothandavar temple)  சித்திரை திருவிழா (Chithirai Festival) சிறப்பாக நடைபெற்றது. திருநங்கைகள், தங்களின் மேனியுடன் திருமாங்கல்யம் வாங்கி கோவிலுக்கு வந்து, பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகள், பாரதம் பாடும் நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்றன. அரவான் கண் திறத்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர். விழாவின் 16-வது நாளில், அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், தேரோட்டம் மற்றும் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2025 ஏப்ரல் மாதம் 29-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, தொடர்ந்து பல்வேறு ஆராதனைகள், பாரதம் பாடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பன்முகமான நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றன.

அரவான் கண் திறத்தல் நிகழ்ச்சி

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த மாலை அரவான் கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர். பட்டுப்புடவை, பூக்கள், வளையல்கள் மற்றும் நகைகளால் அலங்கரித்த திருநங்கைகள் திருமாங்கல்யம் வாங்கி, கோவிலுக்குள் சென்று அரவானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுடன், ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர்.

கண் திறத்தல் நிகழ்ச்சி உற்சாகம்

திருமாங்கல்யம் வாங்கிய திருநங்கைகள், அரவானை தங்களின் கணவனாக நம்பி, கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். தாலி கட்டிய பிறகு, புதிய மணப்பெண்ணாகக் காட்சியளித்த திருநங்கைகள், இரவு முழுவதும் கொள்கலன் நடனங்கள் மற்றும் கும்மியாட்டுடன் ஆராதனை செய்து, தங்களின் கணவனான அரவானின் பெருமைகள் குறித்து ஆடிப் பாடியும் உற்சாகமாக சிறப்பித்தனர்.

விழாவின் அடுத்த நிகழ்ச்சிகள்

இன்றைய 2025 மே 14 புதன்கிழமை 16-வது நாள் நிகழ்ச்சியில், அதிகாலை கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு, தேரோட்டம் நடக்கிறது. கோவிலின் 4 மாட வீதிகள் வழியாக பக்தர்கள் தங்களின் உற்சாகத்துடன் தேர் பவனி செய்ய, அந்த பவனி அழிகளம் நோக்கி சென்று தற் போது திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவார்கள்.

பின்னர், மதியம் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் சென்றடைந்ததும், அரவானுக்கு களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில், திருநங்கைகள் வெள்ளை சேலை அணிந்து, விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு, கூவாகம் கிராமத்தை விட்டு தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வார்கள்.