கணக்குகள் Ban செய்யப்படும்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எக்ஸ்! | TV9 Tamil News

கணக்குகள் Ban செய்யப்படும்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எக்ஸ்!

Published: 

05 Jan 2026 12:09 PM

 IST

X Warning To Its Users | எக்ஸ் தளத்தில் உள்ள குரோக் ஏஐ அம்சத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில், அது குறித்து எக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 / 5அதாவது வாட்ஸ்அப்பில் மெட்டா ஏஐ உள்ளதை போல, எக்ஸ் தளத்தில் இந்த குரோக் ஏஐ உள்ளது. இந்த குரோக் ஏஐ மூலம் பல சேவைகளை பெற முடியும். இதனை பலரும் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இதில் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது, குரோக் ஏஐ பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கொடுப்பதாக புகார்கள் எழுந்து வந்தன. 

அதாவது வாட்ஸ்அப்பில் மெட்டா ஏஐ உள்ளதை போல, எக்ஸ் தளத்தில் இந்த குரோக் ஏஐ உள்ளது. இந்த குரோக் ஏஐ மூலம் பல சேவைகளை பெற முடியும். இதனை பலரும் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இதில் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது, குரோக் ஏஐ பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கொடுப்பதாக புகார்கள் எழுந்து வந்தன. 

2 / 5

இவ்வாறு தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில், அது இந்திய அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில், எக்ஸ் நிறுவனத்திற்கு 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பியது. அதாவது, பயனர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் வகையில் சித்தரிக்கப்படும் புகைப்படங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

3 / 5

இவ்வாறு தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில், அது இந்திய அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில், எக்ஸ் நிறுவனத்திற்கு 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பியது. அதாவது, பயனர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் வகையில் சித்தரிக்கப்படும் புகைப்படங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. 

4 / 5

இந்த நிலையில், குரோக் ஏஐ செயலியை பயன்படுத்தும் நபர்கள், சட்டவிரோத தகவல்கள் மற்றும் படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, சட்டவிரோத தகவல்கள், படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களின் கணக்குகளுக்கு நிரந்தரமாக தடை விதிகப்படும் என்று எச்சரித்துள்ளது. 

5 / 5

குரோக் ஏஐ அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் பலர் பெண்களின் புகைப்படங்களை கொடுத்து பிகினி உடையில் மாற்றி தர கோரி கேட்டுள்ளனர். எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கின் புகைப்படத்தையும் இந்த குரோக் ஏஐ கொண்டு பிகினி உடையில் எடிட் செய்திருந்தனர். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.