பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ! | TV9 Tamil News

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா !

Updated On: 

27 Feb 2026 12:52 PM

 IST

PM Modi : தென்னிந்திய சினிமாவில் பிரபல ஜோடியாக இருந்துவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் நேற்று (26/02/2026) திருமணம் செய்திருந்தனர். மேலும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடியை நேரில் சென்று அழைத்துள்ளனர்.

1 / 6தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான கதாநாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரும் நடிகை ராஷ்மிகா மனிதனா இருவருமே, சினிமாவின் ஆரம்பத்தில் சிறந்த நண்பர்களாக இருந்த நிலையில், காதலர்களாக மாறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான கதாநாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரும் நடிகை ராஷ்மிகா மனிதனா இருவருமே, சினிமாவின் ஆரம்பத்தில் சிறந்த நண்பர்களாக இருந்த நிலையில், காதலர்களாக மாறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2 / 6

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமணம் நேற்று (26/02/2026) தேதியில் உதய்பூரில் உள்ள அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இவர்கள் இருவரின் திருமணத்திற்கு உறவினர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். தெலுங்கு முறைப்படி, ராஜா மற்றும் ராணியின் திருமணத்தை போலவே மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

3 / 6

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு மாநிலத்தை சேர்ந்தவர் மற்றும் ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற நிலையில், காலை தெலுங்கு முறைப்படியும் மாலையில் கர்நாடக முறைப்படி என இரு முறை இவர்களின் திருமணம் நடைபெற்றிருந்ததாம். இவரிகளின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குரிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர்களின் திருமணம் வரவேற்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாம்.

4 / 6

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா தம்பதி, பிரதமர் நரேந்திர மோடியை தங்களின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக நேரில் சென்று அழைத்துள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 2026 மார்ச் 4ம் தேதியில் ஹைதராபாத்தில் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடியையும் அழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 6

நேற்று விரோஷ் தம்பதியின் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றிருந்த நிலையில், வரும் 2025 மார்ச் 4ம் தேதியில், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் தாஜ் கிருஷ்ணா என்ற பகுதியில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.

6 / 6

இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது.

Follow Us