பங்குனி உத்திரம்.. இதையெல்லாம் தவறியும் செய்யக்கூடாது.. முழு விவரம்!! | TV9 Tamil News

பங்குனி உத்திரம்.. இதையெல்லாம் தவறியும் செய்யக்கூடாது.. முழு விவரம்!!

Published: 

28 Mar 2026 14:20 PM

 IST

Panguni Uthiram: தமிழகத்தின் காவல் தெய்வமான சாஸ்தாவைத் தங்கள் குலதெய்வத்தின் ஒரு அங்கமாகப் பல குடும்பங்கள் வழிபடுகின்றனர். தூரமான இடங்களில் குலதெய்வம் இருப்பவர்கள், தங்கள் தோட்டத்திலோ அல்லது வயல் வெளியிலோ உள்ள ஒரு மரத்தடியில் காவல் தெய்வத்திற்குப் படையலிட்டு வழிபடும் வழக்கமும் உள்ளது.

1 / 5தமிழ் மாதங்களில் 12-வது மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் 'பங்குனி உத்திரம்' என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. பங்குனி மாதம் தெய்வங்களுக்குரிய சுப வைபவங்கள் நடைபெறும் காலம் என்பதால், பொதுவாக இம்மாதத்தில் மனிதர்கள் சுப நிகழ்ச்சிகளை (திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவை) தவிர்ப்பது வழக்கம். தேவாதி தேவர்களின் திருமணங்கள் நடைபெற்ற நாள் இது.

தமிழ் மாதங்களில் 12-வது மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் 'பங்குனி உத்திரம்' என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. பங்குனி மாதம் தெய்வங்களுக்குரிய சுப வைபவங்கள் நடைபெறும் காலம் என்பதால், பொதுவாக இம்மாதத்தில் மனிதர்கள் சுப நிகழ்ச்சிகளை (திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவை) தவிர்ப்பது வழக்கம். தேவாதி தேவர்களின் திருமணங்கள் நடைபெற்ற நாள் இது.

2 / 5

பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் பழனி ஆகிய தலங்களில் இது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பழனி முருகன்: தாரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நிகழ்வுடன் தொடர்புடையது. இங்கு பால்காவடி, பன்னீர் காவடி எடுப்பது மிகவும் விசேஷம். தொழில் மேன்மை, கடன் தொல்லை நீங்குதல், குழந்தைகளுக்குப் பேச்சுத் திறன் வளர்தல் மற்றும் தைரியம் கூடுதல் போன்ற பலன்களுக்காக மக்கள் காவடி எடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பால்காவடி எடுத்து வழிபடுவது சிறந்தது.

3 / 5

தவிர்க்க வேண்டியவை: பங்குனி உத்திரம் என்பது தேவாதி தேவர்களின் திருமண வைபவங்கள் நடைபெறும் காலம். எனவே, அந்த மாதத்தில் மனிதர்கள் தங்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளான திருமணம் செய்தல், புதுமனை புகுவிழா (வீடு குடி போகுதல்) போன்றவற்றைச் செய்ய மாட்டார்கள். "பங்குனி கூனி" என்று அழைக்கப்படுவதால், இந்த மாதத்தில் இத்தகைய சுப காரியங்களைத் தவிர்ப்பது மரபு என்று அவர் குறிப்பிடுகிறார்.

4 / 5

நேர்த்திக்கடனில் அலட்சியம்: ஒருமுறை காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டு அல்லது தொடங்கினால், அதை இடையில் நிறுத்தக் கூடாது. அவ்வாறு அலட்சியப்படுத்தினால் அல்லது ஏமாற்றினால் அது குடும்பத்திற்குச் சில தடைகளை உருவாக்கும் என்று எச்சரிக்கிறார். முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்போது (அலகு குத்துதல் போன்றவை) பயத்தோடோ அல்லது நம்பிக்கையற்ற மனநிலையோடோ இருக்கக்கூடாது. இது ஒருவரது பாவங்களைப் போக்கி, தன்னை நிரூபிக்கும் ஒரு ஆன்மீகச் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

5 / 5

சுருக்கமாகச் சொன்னால், தெய்வங்களுக்குரிய இந்த மாதத்தில் மனிதர்களுக்கான பெரிய சுப காரியங்களைத் தவிர்த்துவிட்டு, முழுமையாகத் தெய்வ வழிபாட்டிலும், நேர்த்திக்கடன்களிலும் கவனம் செலுத்துவதே முறை. துலாம் ராசியில் செவ்வாய் அல்லது ராகு இருப்பவர்கள், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருக வழிபாட்டிலும் காவடி எடுப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். செவ்வாயின் வீரியம் அதிகரிக்கவும், வாழ்வில் தடைகள் நீங்கவும் இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Follow Us