ஐஸ் வாட்டர் குடிப்பது உண்மையில் உடல் வெப்பத்தைக் குறைக்குமா? | TV9 Tamil News

ஐஸ் வாட்டர் குடிப்பது உண்மையில் உடல் வெப்பத்தைக் குறைக்குமா?

Published: 

27 Apr 2026 20:19 PM

 IST

உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க, தினமும் 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் அருந்துவது கட்டாயமாகும். ஆனால், சாதாரண வெப்பநிலையில் உள்ள குடிநீர் அல்லது மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரை அருந்துவதே சிறந்தது. செரிமானத்திற்கும் பல் ஆரோக்கியத்திற்கும் மிதமான சூடுள்ள நீரே எப்போதும் உகந்தது

1 / 5கடுமையான கோடை வெப்பத்தின்போது தாகத்தைத் தணிக்க, ஃபரிட்ஜில் இருந்து நேரடியாக எடுத்து, ஐஸ் போன்ற குளிர்ந்த நீரை அருந்துவது பலரின் வழக்கமாக உள்ளது. இது தற்காலிகமான நிவாரணத்தை அளித்தாலும், அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்த நீரை அருந்துவது உடலுக்குப் பல தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடுமையான கோடை வெப்பத்தின்போது தாகத்தைத் தணிக்க, ஃபரிட்ஜில் இருந்து நேரடியாக எடுத்து, ஐஸ் போன்ற குளிர்ந்த நீரை அருந்துவது பலரின் வழக்கமாக உள்ளது. இது தற்காலிகமான நிவாரணத்தை அளித்தாலும், அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்த நீரை அருந்துவது உடலுக்குப் பல தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2 / 5

சாப்பிட்ட உடனேயே ஐஸ் வாட்டரை குடிப்பது செரிமான மண்டலத்தை பாதிக்கக்கூடும். இது வயிற்றிலுள்ள இரத்த நாளங்களைச் சுருக்கி, செரிமானத்திற்கு உதவும் நொதிகளின் செயல்பாட்டை மந்தமாக்குகிறது. இதன் விளைவாக, உணவு முறையாகச் செரிக்கப்படாமல், வயிறு உப்புசம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. குளிர்ந்த நீரை அருந்துவது, நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்பை கெட்டியாக்கிவிடுகிறது.

3 / 5

குளிர்ந்த நீர் தொண்டை வலி மற்றும் சளித் தொல்லை உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். உணவு உண்ட பிறகு ஐஸ் வாட்டரை அருந்துவது, சுவாசப் பாதையில் ஒரு பாதுகாப்புப் படலமாகச் செயல்படும் சளியின் அளவை அதிகரிக்கிறது. இது சுவாசப் பாதையில் தொற்றுகளையும், சளியையும் ஏற்படுத்தக்கூடும். தொண்டையிலுள்ள இரத்த நாளங்கள் தற்காலிகமாகச் சுருங்குவது, தொண்டையில் ஒருவித அசௌகரியத்தை உண்டாக்குகிறது.

4 / 5

அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்த நீரை அருந்துவது, முதுகெலும்பில் உள்ள நரம்புகளைக் குளிர்ச்சியடையச் செய்து, மூளைக்குத் தவறான சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது திடீரெனத் தலைவலி ஏற்படக் காரணமாக அமைவதுடன், ஒற்றைத் தலைவலி பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த நோயின் தீவிரத்தை அதிகரிக்கவும் கூடும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்குக் குளிர்ந்த நீர் ஒரு தீவிரமான சவாலாக அமைகிறது. ஐஸ் நீர் பற்களின் வெளிப்புறப் படலமான 'எனாமலை' பலவீனப்படுத்தக்கூடும். இது பற்களில் கூச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

5 / 5

உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க, தினமும் 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் அருந்துவது கட்டாயமாகும். ஆனால், சாதாரண வெப்பநிலையில் உள்ள நீர் அல்லது மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீர் அருந்துவதே சிறந்தது. செரிமானத்திற்கும் பல் ஆரோக்கியத்திற்கும் மிதமான சூடுள்ள நீரே எப்போதும் உகந்தது. கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க தண்ணீர் அருந்தும்போது, ​​உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய நீரை அருந்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

Follow Us