News9 Global Summit: உலகத்தரம் வாய்ந்த நாடாக UAE.. TV9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் பருண் தாஸ் பெருமிதம்!
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒரு அற்புதமான நாடாக மாற்றியுள்ளனர். அதனால் முதலில் உங்களுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. பின்னர் அந்த தொலைநோக்குப் பார்வையைத் தொடர உங்களுக்கு தைரியமும் அர்ப்பணிப்பும் தேவை என TV9 நெட்வொர்க்கின் MD & CEO பருண் தாஸ் கூறியுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய செய்தி குழுமமான TV9 நெட்வொர்க்கின் உலகளாவிய சித்தாந்த தளமாக அறியப்படும் நியூஸ் 9 உலகளாவிய உச்சி மாநாடு (News9 Global Summit) துபாயில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் பேசிய TV9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பருண் தாஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் நியூஸ்9 குளோபல் உச்சி மாநாடு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன் என்று கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அமைச்சர் ஷேக் நஹ்யான் முபாரக் அல் நஹ்யான் இன்று இந்த மேடையில் இருந்திருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் சில முக்கியமான பணிகள் காரணமாக அவரை அழைக்க முடியவில்லை என்று கூறினார். அதேசமயம் இந்த உச்சி மாநாட்டில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விரைவில் புதுடெல்லியில் இருந்து காணொளி காட்சி முறையில் இணைவார் என கூறினார்.
தொலைநோக்கு பார்வை அவசியம்
தொடர்ந்து பேசிய பருண் தாஸ், “மனிதகுலத்தின் கதை ஒரே ஒரு விஷயத்தைப் பற்றியது தான். அது ஒவ்வொரு நாளும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒரு அற்புதமான நாடாக மாற்றியுள்ளனர். அதனால் முதலில் உங்களுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. பின்னர் அந்த தொலைநோக்குப் பார்வையைத் தொடர உங்களுக்கு தைரியமும் அர்ப்பணிப்பும் தேவை. நான் துபாய்க்கு வரும் ஒவ்வொரு முறையும், இது எனக்கு நினைவூட்டப்படுகிறது என்று நான் சொல்ல வேண்டும். நான் துபாயை ‘இயக்கத்தில் உள்ள தொலைநோக்குப் பார்வை’ என்று அழைக்கிறேன்” என குறிப்பிட்டார்.
மேலும் ஒரு நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெற்றியைப் பற்றி டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பருண் தாஸ் பேசுகையில், “1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவப்பட்டதிலிருந்து, இந்த நாட்டின் தொலைநோக்குத் தலைவர்கள் அதை உண்மையிலேயே அற்புதமான நாடாக மாற்றியுள்ளனர். அவர்களின் துணிச்சலான கனவுகளைத் தொடர ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எதிர்கொண்டிருக்க வேண்டிய சவால்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இருப்பினும், அவர்கள் தங்கள் வலுவான உறுதியைக் காட்டி, இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸை உலகின் பிற பகுதிகள் பொறாமைப்படும் ஒரு செழிப்பான, முற்போக்கான நவீன நாடாக மாற்றியுள்ளனர். இன்று எமிரேட்ஸ் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் முக்கியமான ஒரு நாடாகும்” என புகந்தார்.
உலகளாவிய வணிகம், புதுமை மற்றும் கலாச்சாரத்திற்கான உலகத் தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான நகரமாக ஐக்கிய அரபு அமீரக நாடு மாறியுள்ளது. நான் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா அல்லது உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் இடமான துபாய் மால் அல்லது அபுதாபியில் உள்ள அழகான சுவாமிநாராயண் கோயில் பற்றி பேசவில்லை. இவையெல்லாம் இந்த நாடு அனைவரின் மீதும் வைத்திருக்கும் மறுக்க முடியாத அன்பின் தனித்துவமான எடுத்துக்காட்டு என கூறினார்.
துபாயை தேர்வு செய்ய காரணம்
அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெற்றி அது உருவாக்கிய தனித்துவமான டிஎன்ஏவில் உள்ளது. எனவே, எங்கள் இரண்டாவது சர்வதேச நியூஸ்9 குளோபல் உச்சி மாநாட்டை துபாயில் நடத்த முடிவு செய்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை எனவும் பரூண் தாஸ் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து பேசிய அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த தலைமையின் கீழ் புதிய உயரங்களைத் தொடும் இருதரப்பு உறவுகளில் ஒரு பலத்தை பெருக்குவது எங்கள் நோக்கமாகும். அதனால் தான் இந்த மாநாட்டின் கருப்பொருளாக “செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியா-யுஏஇ கூட்டாண்மை” என பெயரிட்டுள்ளோம்.
பிரதமர் மோடியின் நம்பிக்கை
2015 ஆம் ஆண்டில், பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி 34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமரானபோது, அவர் நாட்டிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பலர் ஆச்சரியப்பட்டனர், ஆனால், நமது பிரதமரும் நம்புவது போல், இரு நாடுகளும் பரஸ்பர செழிப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், ஆசிய நூற்றாண்டின் தொலைநோக்கு பார்வையை உணரவும் உதவும் ஒரு மாற்றத்தக்க பொருளாதார கூட்டாண்மையை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பார்ட்னராக மாறியுள்ளது. பிப்ரவரி 2022 இல் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) கையெழுத்தானது. இருதரப்பு வர்த்தகம் பின்னர் இரட்டிப்பாகி 83 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது, மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனித்துவமான அம்சம்
கடந்த வாரம் அபுதாபியில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு சென்று பூஜ்ய பிரம்மவிஹாரி சுவாமியைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சுவாமி இன்று மாலை அமெரிக்காவிலிருந்து காணொளி முறையில் உரையாற்றுவார். உலகின் 8வது அதிசயம் என்று நான் எளிதாக அழைக்கக்கூடிய கோயில் கட்டுமானம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். பூஜ்ய பிரம்மவிஹாரி சுவாமி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமையின் ஒரு தனித்துவமான அம்சத்தையும் அவர் எனக்கு உணர்த்தினார். என்று பருண் தாஸ் கூறினார்.
அனைத்து மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு அமைதியும் நல்லிணக்கமும் மையமாக இருக்க வேண்டும். இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவு மிகவும் விலைமதிப்பற்றது. இது இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, முழு உலகிற்கும் பயனளிக்கும். இன்றைய உலகளாவிய உச்சிமாநாட்டின் தொலைநோக்குப் பார்வையும் இதுதான் என TV9 நெட்வொர்க்கின் MD & CEO பருண் தாஸ் கூறினார்.