Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்.. மியான்மர், தஜிகிஸ்தானிலும் உணரப்பட்டது!

Himachal Pradesh Earthquake | ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று (ஏப்ரல் 13, 2025) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர், தஜிகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த பகுதியில் எந்த அளவில் நிலடுக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்.. மியான்மர், தஜிகிஸ்தானிலும் உணரப்பட்டது!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 13 Apr 2025 20:16 PM

ஹிமாச்சால பிரதேசம், ஏப்ரல் 13 : ஹிமாச்சல பிரதேசத்தில் (Himachal Pradesh) இன்று (ஏப்ரல் 13, 2025) காலை லேசான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமன்றி அண்டை நாடுகளான மியான்மர் (Myanmar) மற்றும் தஜிகிஸ்தான் (Tajikistan) பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த பகுதிகளில் எவ்வளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹிமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

ஹிமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13, 2025) காலை 9.19 மணி அளவில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது, 3.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டு இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பீதியில் உறைந்த நிலையில், ரிக்டர் அளவு மிகவும் குறைவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், பெரிதாக எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் எக்ஸ் பதிவு

மியான்மர் நிலநடுக்கம்

மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. மிகப்பெரிய கட்டடங்களும் இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமான நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,500 கடந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 13, 2025) மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மியான்மரில் 5.1 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்

ஹிமாச்சல பிரதேசம், மியான்மர் மட்டுமன்றி தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 13, 2025) காலை, 9.54 மணி அளவில் அங்கு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!
அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!...
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!...
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்...
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது......
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்...
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ...
"ஒன்றாக டின்னர் சாப்பிடுங்க" டிரம்ப் சொன்ன விஷயம்
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை......
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?...