Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெங்களூரில் அதிர்ச்சி: சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை

Bengaluru Road Rage: பெங்களூரில், சிகரெட் கேட்டதற்காக, பிரதீக் எனும் நபர் தனது காரை ஓட்டி சஞ்சய் மற்றும் சேதன் ஆகிய இரு ஐடி ஊழியர்களை மோதினார். இந்த விபத்தில் சஞ்சய் உயிரிழந்தார், சேதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரதீக் குடிபோதையில் இருந்ததாகவும், கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் அதிர்ச்சி: சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலைImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 17 May 2025 19:35 PM

பெங்களூர் மே 17: பெங்களூரில் சிகரெட் (Cigarette) வாங்கி தர மறுத்ததையே காரணமாக மென்பொருள் ஊழியர் (Software employee)  சஞ்சயின் மீது பிரதீக் கார் ஏற்றியத்தில் சஞ்சய் 2025 மே 13 அன்று உயிரிழந்தார். சம்பவம் வசந்தபுரா குறுக்குவழியில் 2025 மே 10-ஆம் தேதி நடந்தது. பிரதீக் குடிபோதையில் இருந்தபோது சஞ்சயுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் சேதன் பைக் ஓட்டும்போது, பிரதீக் காரை அவர்கள் மீது ஏற்றினார். சேதன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சுப்ரமணியபுரம் போலீசார் பிரதீக்கை கொலை குற்றச்சாட்டில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரில் ஐடி ஊழியர்கள் மீது கார் விரட்டி தாக்குதல்

பெங்களூரை சேர்ந்த சஞ்சய் மற்றும் சேத்தன் ஆகிய இரண்டு நண்பர்கள், இருவரும் ஐடி நிறுவனத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். ஒருநாள் அதிகாலை 4 மணிக்கு, தேநீர் குடிக்க வெளியே சென்ற அவர்கள் இடத்தில், பிரதிக் என்பவர் தனது மனைவியுடன் காரில் வந்தார். அந்நேரம் கடைகள் இல்லாததால், பிரதிக் சஞ்சயிடம் சிகரெட் கேட்டார். ஆனால் சஞ்சயிடம் சிகரெட் இல்லாததால், அவர் கடைக்கு சென்று வாங்க சொல்லிவிட்டு, சஞ்சய், சேத்தன் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணம் தொடர்ந்தனர்.

கார் விரட்டிச் சென்றும் மோதி தாக்குதல்

பிரதிக் அவர்களை காரில் விரட்டிச் சென்று, இருவரையும் வாகனத்தில் ஏற்றிக் கொலை செய்ய முயன்றார். இதனால் அவர்கள் இருசக்கர வாகனத்தில் மோதி சுவர் மீது மோதினர். நிகழ்விடத்தில் இருவரும் கடுமையாக காயமடைந்து உயிருக்குப் போராடினர்.

மருத்துவமனையில் உயிர் போராட்டம்

பெங்களூரில், சிகரெட் கேட்டதற்காக, பிரதீக் எனும் நபர் தனது காரை ஓட்டி சஞ்சய் மற்றும் சேதன் ஆகிய இரு ஐடி ஊழியர்களை மோதினார். இந்த விபத்தில் சஞ்சய் உயிரிழந்தார், சேதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரதீக் குடிபோதையில் இருந்ததாகவும், கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயம் அடைந்த இருவரையும் அங்கு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர். சேத்தன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதுடன், அவருடைய உடல்நிலை ஸ்திரமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் உடல் பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் நடவடிக்கை, வழக்கு பதிவு

இந்த சம்பவத்தில் பிரதிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதிக் கார் ஏற்றிய போது இருவரும் வாகனத்தில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. பொதுமக்கள் இதனைக் கண்டபோது பதற்றம் ஏற்பட்டது. பிரதிக்குத் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மும்பை ஸ்டேடியத்தில் ரோஹித் பெயர்.. குடும்பமே கண்கலங்கிய தருணம்!
மும்பை ஸ்டேடியத்தில் ரோஹித் பெயர்.. குடும்பமே கண்கலங்கிய தருணம்!...
உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?
உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?...
நயன்தாராவிற்கு அது கூட செய்யத் தெரியாது - சரண்யா பொன்வண்ணன்!
நயன்தாராவிற்கு அது கூட செய்யத் தெரியாது - சரண்யா பொன்வண்ணன்!...
முதல் போட்டியில் தடைப்போட்ட மழை.. KKR அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்!
முதல் போட்டியில் தடைப்போட்ட மழை.. KKR அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்!...
விஜய் ஆண்டனியின் 26வது படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் அப்டேட்
விஜய் ஆண்டனியின் 26வது படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் அப்டேட்...
கோடையில் சிறுநீரக கற்கள் ஏன் அதிகமாக ஏற்படுகின்றன தெரியுமா?
கோடையில் சிறுநீரக கற்கள் ஏன் அதிகமாக ஏற்படுகின்றன தெரியுமா?...
நிரந்தர தடை - இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
நிரந்தர தடை - இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை...
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!...
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்...
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி..
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி.....
மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!
மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!...