Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிட்னிக்கு அருமருந்தாக கிடைத்த பதஞ்சலியின் ரெனோக்ரிட்… அப்படி என்ன ஸ்பெஷல்?

Patanjali's Renogrit Tablet: பதஞ்சலி நிறுவனத்தின் ரெனோக்ரிட் மாத்திரை சிறுநீரக நோய்களுக்கு பயனுள்ளதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. "நேச்சர்" ஜர்னலில் வெளியான ஆய்வில், இது எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க இயற்கை மூலிகைகளால் உருவாக்கப்பட்ட இந்த மருந்து, சிறுநீரக அழற்சி மற்றும் செல்கள் சேதத்தை குறைக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிட்னிக்கு அருமருந்தாக கிடைத்த பதஞ்சலியின் ரெனோக்ரிட்… அப்படி என்ன ஸ்பெஷல்?
பதஞ்சலியின் ரெனோக்ரிட் மருந்து
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 Apr 2025 07:08 AM

பதஞ்சலி நிறுவனத்தின் ரெனோக்ரிட் மாத்திரை (Patanjalis Renogrit Tablet) சிறுநீரக நோய்களின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த மருந்தின் தாக்கம் பற்றிய ஆய்வு பிரபலமான “நேச்சர்” ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், ரெனோக்ரிட் மாத்திரை எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சிறுநீரக நோய்களை குணமாக்குவதாக கூறப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம் (Patanjali Ayurved) 2006ஆம் ஆண்டு ஸ்வாமி ராம்தேவ் மற்றும் ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஆகியோரால் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் இயற்கை மற்றும் ஆரோக்கிய பொருட்களை உற்பத்தி செய்து, இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத நிறுவனமாக வளர்ந்துள்ளது. பதஞ்சலி, உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், அழகுப்பொருட்கள், மற்றும் பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது.

கிளினிக்கல் ஆய்வுகளில் வெளியான தகவல்

ரெனோக்ரிட் மாத்திரை, ஆல்லோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கான்சர் மருந்துகளால் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும், சிறுநீரக செல்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, அவற்றின் செயல் திறனை மேம்படுத்துகிறது. இந்த மருந்து, சிறுநீரக கோளாறுகளின் தீவிர நிலைகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அதனால் எந்தவிதமான பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ரெனோக்ரிட் பயனுள்ளதாக இருக்கும்

ஆராய்ச்சியில், இந்த மருந்து உடலில் ஏற்படும் அழற்சிகளை (inflammation) குறைக்கும் திறன் கொண்டது என்றும், சிறுநீரகத்தின் இயற்கையான செயல் திறனை மேம்படுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்து சிறுநீரக நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

மருந்தின் மூலக்கூறுகள் மற்றும் ஆயுர்வேதப் பயன்கள்

ரெனோக்ரிட் மாத்திரை, மருந்து முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாகும். இதில் பாஷாணபேதி, பலாஷ், வருண், புனர்னவா மூலிகை, காச்னி, கோகரோ போன்ற மூலிகைகள் உள்ளன.

ஆயுர்வேதத்திற்கான சர்வதேச அங்கீகாரம்

நேச்சர் ஜர்னல் உலகின் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றாகும். இந்த ஆய்வு, ரெனோக்ரிட் மாத்திரை எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சிறுநீரக நோய்களை குணமாக்கும் திறன் கொண்டது என்பதற்கான விஞ்ஞானத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை என்பதை எடுத்துக் காட்டுகிறது. மேலும், இந்த மருந்து சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, உடலிலிருந்து விஷச்சேர்மிகளை (toxins) வெளியேற்ற உதவுகிறது.

ஆயுர்வேதத்தின் வளர்ச்சிக்கு புதிய அடையாளம்

பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணன், “ரெனோக்ரிட் மாத்திரையின் வெற்றி ஆயுர்வேதத்திற்கு உலகளவில் விஞ்ஞான அடிப்படையிலான அங்கீகாரம் கிடைப்பதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றம்” என கூறியுள்ளார். இது அவர்களின் தனிப்பட்ட கூற்று மட்டுமல்ல, உலகப் புகழ்பெற்ற “நேச்சர்” ஜர்னலில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டிருப்பது இதற்கான ஆதாரமாக பார்க்கப்படுகிறது.