Karthi : ‘இரண்டு பேரையும் சினிமாவிற்கு வரவேண்டானு அப்பா சொன்னாரு’ – கார்த்தி பேச்சு!
Karthis Cinema Debut : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் கார்த்தி. இவர் நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். சூர்யாவைப் போல பல படங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் கார்த்தி முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தை, தாங்கள் இருவரையும் சினிமாவிற்கு வரவேண்டாம் என்றுதான் கூறினார் என்று பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் சிவகுமாரின் (Shivakumar) 2வது மகன்தான் கார்த்தி (Karthi). இவரும் தந்தையைப் போலச் சிறந்த நடிகரும் கூட, பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக மெய்யழகன் (Meiyazhagan) திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை 96 பட புகழ் இயக்குநர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் நடிகர் அரவித் சாமி இணைந்து நடித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா (Sri Divya) நடித்திருந்தார் இவர் சுமார் 8 வருடங்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்திருந்தார். இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி, சர்தார் 2 ( Sardar 2) மற்றும் வா வாத்தியார் (Vaa vaathiyaar) போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் வா வாத்தியா படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் சர்தார் 2 படத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. சத்தார் 2 படத்தை இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்நிலையில், முன்னதாக கார்த்தி ஒரு நிகழ்ச்சியில், என்னையும், எனது அண்ணன் சூர்யாவையும் சினிமாவில் நுழையவேண்டாம் என்றுதான் , எங்களின் தந்தை சிவகுமார் கூறியன என்று பேசியுள்ளார், அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
நடிகர் கார்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
சினிமாவின் நுழைவு பற்றி கார்த்தி பேசிய விஷயம் ;
முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கார்த்தி, என்க அம்மா எங்களிடம் சிறு வயதில் இருந்து சொன்ன விஷயம் இதுதான், “டேய் உங்கள் அப்பா காசு பணம் சேர்த்து வைக்கவில்லை, அவர் நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். தயவுசெய்து நீங்கள் இருவரும் அதை கெடுத்துவிடதீர்கள்” என்றுதான் கூறினார். நானும் சூர்யா அண்ணனும், சிறு வயதிலிருந்து அந்த வார்த்தையைத்தான் கேட்டு வளர்ந்தோம். அதனால் நிச்சயமாக எங்களின் அப்பா எங்களை வைத்து படம் எடுக்கமாட்டார் என்று தெரியும்.
மேலும் எங்களின் அப்பா எங்கள் இருவரையும் சினிமாவிற்கே வரவேண்டாம் என்றுதான் கூறினார், நான் கல்லூரியை முடித்து இருக்கும்போது, வாழ்க்கையில் 60 சதவீதம் வேலையில் போய்விடும். அந்த 60 சதவீத வேலையில், நானா எனக்குப் பிடித்திருந்த வேலையைச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். எனக்குப் பிடித்த சினிமாவாக இருந்தது, நான் ஆரம்பத்தில் உதவி இயக்குநராகத்தான் சினிமாவில் நுழைந்தேன், பின் நான் நடிகராக நடிக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்தான் கூறினார். நானும் காய் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிவிட்டேன் என்று நடிகர் கார்த்தி ஓபனாக கூறியிருந்தார்.