பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.. எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் என்ன?
DMDK Alliance Meeting: தேமுதிக தரப்பில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர், தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உயர்மட்ட உணர்வாகைகள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

தேமுதிக ஆலோசனை கூட்டம்: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என அனைத்து கட்சிகள் தரப்பிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 11 ஜூன் 2025 அன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர், தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உயர்மட்ட உணர்வாகைகள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்:
தேசிய முற்போக்கு திராவிட கழகம், மண்டலம் வாரியாக மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (11.06.2025) தலைமைக் கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறுகிறது.#Captainaalayam #Dmdkoffice #dmdkparty… pic.twitter.com/ZBblHRaDpR
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) June 11, 2025
அதேபோல் தேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியின் வளர்ச்சி பணிகளை குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனையின் மேற்கொள்கிறார். தேமுதிக தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கூட்டணி யாருடன் அமைக்கும் என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணி யாருடன்?
நேற்றைய தினம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றார். அப்பொழுது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என கேள்வி எழுப்பியபோது இது குறித்து விஜய் தான் பதில் அளிக்க வேண்டும் என சூசகமாக பதில் அளித்துள்ளார். 2026 இல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது தான் என்றும் அப்போதுதான் தப்பு நடந்தாள் ஒரு எதிர்க்கட்சியாக அதனை தட்டிக் கேட்க முடியும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தவெகவுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா விஜயகாந்த் மறைமுகமாக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஜனவரியில் கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பாளர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்