RBI : ரூ.2, 5, 2,000 நோட்டுக்களை இனி அச்சிடப்போவதில்லை.. ஆர்பிஐ திட்டவட்டம்!
Reserve Bank of India | இந்தியாவின் நிதி சார்ந்த விவகாரங்களை கையாண்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கி, புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது, பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இனி ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.2,000 நோட்டுக்களை வெளியிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India), இந்தியாவின் நிதி சார்ந்த விவகாரங்களை கையாண்டு வருகிறது. குறிப்பாக வங்கிகளுக்கு விதிமுறைகளை விதிப்பது, புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவது, நிதி சார்ந்த கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சில ரூபாய் நோட்டுக்களை இனி அச்சிடப்பபோவதில்லை என இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எந்த எந்த ரூபாய் நோட்டுக்களை அச்சிடப்போவதில்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளது, அதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரூபாய் நோட்டுக்களை கையாண்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது, ஏற்கனவே புகழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை நிறுத்துவது என தேவைக்கு ஏற்ப பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் வைத்துள்ளது. முன்னதாக 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை ஆர்பிஐ புழக்கத்தில் வைத்திருந்தது. இவற்றில் 2,000 ரூபாய் நோட்டை மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்தது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தற்போது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அதிக மதிப்பீடு கொண்ட ரூபாய் நோட்டாக 500 ரூபாய் உள்ள நிலையில், அது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சந்தை பங்கில் சுமார் 86 சதவீதம் வெறும் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு 500 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் தான் இனி 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடப்போவதில்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுக்களை வெளியிட போவதில்லை என அறிவிக்க காரணம் என்ன?
சந்தையில் மற்ற ரூபாய் நோட்டுக்களை விடவும் 500 ரூபாய் நோட்டுக்களே அதிகம் உள்ள நிலையில், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை இனி அச்சிடப்போவதில்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளது. மேலும் போலி 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வறுத்தம் தெரிவித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி, போலி ரூபாட் நோட்டுக்களை தடுக்க அதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.