Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூடலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இரும்பு ராடால் தாக்கி கொலை…!

Nilgiris Murder:நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் 55 வயது மைமூனா என்பவர் இரும்பு ராடால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது நகைகள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது. கணவர் வேலைக்குச் சென்ற பின் வீட்டில் தனியாக இருந்த மைமூனாவைக் கொலை செய்தவர் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார் என்பது விசாரணையில் உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

கூடலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இரும்பு ராடால் தாக்கி கொலை…!
வீட்டில் தனியாக இருந்த பெண் இரும்பு ராடால் தாக்கி கொலைImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 18 May 2025 09:03 AM

நீலகிரி மே 18: நீலகிரி மாவட்டம் கூடலூர் (Nilgiris District, Gudalur) அருகே உள்ள நெலாக்கோட்டை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த மைமூனா என்ற பெண் இரும்பு ராடால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை (Woman Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது நகைகள் மற்றும் செல்போன் கொள்ளை செல்லப்பட்டுள்ளன. வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவர் முகமது, மனைவியின் சடலத்தை கண்டதும் அதிர்ச்சியடைந்தார். போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளி வீட்டிற்குள் எவ்வாறு நுழைந்தார் என்பதையும், அவர் ஏற்கனவே மைமூனாவுக்கு அறிமுகமானவரா என்பதையும் விசாரித்து வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண் இரும்பு ராடால் தாக்கி கொலை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை ஒன்பதாவது மயில் பகுதியில் வசித்து வந்தவர் 60 வயதான முகமது. அரபிக் கல்லூரியில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் இவர், தனது மனைவி மைமூனா (வயது 55) உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர்களது பிள்ளைகள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். கணவர் பணிக்குச் சென்ற பிறகு மைமூனா வீட்டில் தனியாகவே இருந்திருக்கிறார்.

மைமூனா இரும்பு ராடால் தாக்கப்பட்டு கொலை

2025 மே 16 வெள்ளிக்கிழமை இரவு பணியை முடித்து முகமது வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் உள்புற கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், பின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, மைமூனா இரும்பு ராடால் கடுமையாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உள்ளார்.

நகை, செல்போன் கொள்ளை – கொலைக்குப் பின் மர்ம நபரின் சித்ரவதை

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மைமூனாவின் காதிலும் கழுத்திலும் இருந்த நகைகள் மற்றும் செல்போன் காணவில்லை. இது நகை கொள்ளைக்காக நிகழ்த்தப்பட்ட கொலை எனவும், கொலையாளி பிணியை சித்ரவதை செய்திருப்பது போன்றவையும் தெரியவந்துள்ளன.

தடயங்கள் சேகரிப்பு, கேரளாவிற்கு தகவல் – பல கோணங்களில் விசாரணை

தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வீட்டுக்கு அண்மையில் வந்திருந்த சந்தேக நபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. சம்பவம் நடைபெறுமுன் அந்தப் பகுதியில் வெளிநாடுகளிலிருந்தவர்கள் வந்து சென்றுள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவுடன் அருகாமையில் இருப்பதால் அங்கு உள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அறிமுகம் வாயிலாக வீட்டிற்குள் நுழைந்தாரா?

வீட்டின் இரு பக்க கதவுகளும் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைமூனாவின் அனுமதி இல்லாமல் யாரேனும் வீட்டிற்குள் நுழைவது எப்படி சாத்தியம்? கொலைக்காரர் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபராக இருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெண்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க கதவுகளை பூட்டி வைக்க வேண்டும். புதுமுகங்களை நேரில் சந்திக்காமல், ஜன்னல் வழியாகவே பேசி அனுப்ப வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க...
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்...
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!...
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!...
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?...
மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்
மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்...
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு...
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?...
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!...
'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா
'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா...
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!...