Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஈரோட்டில் இரட்டை கொலை: மூத்த தம்பதியை மர்ம நபர்கள் கொலை செய்த குற்றத்தில் 3 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

Erode Double Murder: ஈரோடு மாவட்டம், விலாங்காட்டு வலசுவில் ராமசாமி மற்றும் பாக்கியம் தம்பதியர் கொலை செய்யப்பட்டு, 12 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியின் மகன் கவிசங்கர் மூலம் கொலை தெரியவந்தது. போலீசார் 12 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்துள்ளனர்.

ஈரோட்டில் இரட்டை கொலை: மூத்த தம்பதியை மர்ம நபர்கள் கொலை செய்த குற்றத்தில் 3 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை
மூன்று சந்தேகநபர்கள் கைதுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 18 May 2025 10:47 AM

ஈரோடு மே 18: ஈரோட்டில் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட மூத்த தம்பதியின் மகன் கவிசங்கர் (Son Kavisangar) தொலைபேசியில் 2025 மே ஒன்றாம் தேதி தனது தந்தை ராமசாமியுடன் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால், அக்கம் பக்கத்திலுள்ள உறவினர்களை வீட்டிற்குச் சென்று பார்க்க கூறினார். அவர்களால் வீட்டில் துர்நாற்றம் வீசியது கவனிக்கப்பட்டு, உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராமசாமி (Ramasami) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (Bakiyam) இருவரும் கொலை (Erode Double Murder) செய்யப்பட்டதையும், வீடில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேரில் வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் பிரிவு மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இரட்டை கொலை தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை (Police investigation) மேற்கொண்டு வருகின்றனர்.

விலாங்காட்டு வலசுவில் அதிர்ச்சி சம்பவம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விலாங்காட்டு வலசு கிராமத்தில் நடந்த இரட்டை கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வசித்து வந்த ராமசாமி (75) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (65) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் வீடில் சடலமாகக் கிடந்தனர்.

தந்தை பதிலளிக்காததால் சந்தேகம்

ராமசாமியின் மகன் கவிசங்கர், தொலைபேசியில் தந்தையுடன் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால், அக்கம் பக்கத்தினரை வீட்டில் பார்ப்பதற்காக அனுப்பினார். அவர்கள் வீட்டை சென்றபோது துர்நாற்றம் வீசியதை கவனித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

12 பவுன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

போலீசார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில், தம்பதியர் இருவரும் கொலை செய்யப்பட்டதும், வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேரில் ஆய்வு செய்தார். மோப்பநாய் பிரிவு, கைரேகை நிபுணர்கள் ஆகியோர் தடயங்களை சேகரித்தனர்.

மூன்று சந்தேக நபர்கள் கைது – 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை

இந்த இரட்டை கொலை தொடர்பாக 12 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக மூன்று பேரை கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

உடல் பெற்றுத்தர உறவினர்கள் மறுப்பு

ராமசாமியின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்தனர். போலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையில், 30 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை போலீசார் ஏற்றதால் இருவரது உடலையும் வாங்க சம்மதம் தெரிவித்து, இறுதி சடங்கு செய்தனர். இந்த சூழலில் ஈரோட்டில் நடந்த இரட்டை கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!
ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!...
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?...
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க...
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்...
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!...
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!...
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?...
மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்
மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்...
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு...
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?...
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!...