பேரனின் திருமணத்திற்கு அழைக்காததால் விரக்தி.. விஷம் குடித்து விபரீத முடிவு எடுத்த முதியவர்.. சோக சம்பவம்!
Elderly Man Killed Himself After in Tenkasi | தென்காசியை சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவர், தனது பேரனின் திருமணத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
தென்காசி, ஜூன் 08 : தென்காசியில் பேரனின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற மன உளைச்சலில், முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பகீர் காரணம் தெரிய வந்துள்ளது. பேரன் தன்னை திருமணத்திற்கு அழைக்காததால் முதியவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் விபரீத முடிவு எடுத்த முதியவர்
தென்காசி மாவட்டம், சின்ன குமார் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். 87 வயதாகும் இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜூன் 4, 2025 அன்று, முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில், முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் அவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 6, 2025 அன்று உயிரிழந்தார்.
போலீசாரின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்
இது குறித்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். போலீசாரின் விசாரணையில், ஆறுமுகத்தின் மகள் அரியபுரத்தில் வசித்து வருவது தெரியும் வந்துள்ளது. அவரின் மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக ஆறுமுகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முதியவர் ஆறுமுகம், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
முதுமை காலத்தில் தனிமை மிகவும் கொடுமையான ஒன்றாக உள்ளது. முதியவர்களுக்கு ஆதரவும், அக்கரையும் தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் பேரனின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என முதியவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.