Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிறந்த 13 நாளே ஆன குழந்தை.. தாய்ப்பால் குடித்த நிலையில் உயிரிழந்த சோகம்..

13 Days Old Baby Dies: சென்னை தாம்பரம் சேலையூர் காந்தி நகர் பகுதியில் பிறந்த 13 நாளே ஆன ஆண் குழந்தை தாய்ப்பால் குடித்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் காச நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்த 13 நாளே ஆன குழந்தை.. தாய்ப்பால் குடித்த நிலையில் உயிரிழந்த சோகம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jun 2025 06:50 AM

சென்னை, 21 ஜூன் 2025: தாம்பரம் அருகே தாயிடம் பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் காச நோய்க்காக தெடர் சிகிச்சையில் இருந்த நிலையில் பால் குடித்த குழந்தை இறந்தது குறித்தது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் அல்லது வேறு எந்த ஒரு உணவையும் அல்லது தண்ணீரையும் வழங்கக்கூடாது குழந்தைகளின் சிறுநீரகம் முழுமையான செயல்பாட்டிற்கு வராததன் காரணமாக முதல் ஆறு மாதம் தாய்ப்பால் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும் தாய்ப்பால் இல்லாதவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஃபார்முலா பால் கொடுக்கலாம் அதேபோல் முதல் ஒரு மாத காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

காசநோய்க்காக சிகிச்சை எடுத்த தாய்:

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காந்திநகர், அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 33), அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிந்தாமணி (வயது 28), இவர்களுக்கு லித்திகா என்ற ஆறு வயது மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 13 நாட்களுக்கு முன்பு சிந்தாமணிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

சிந்தாமணிக்கு காசநோய் இருந்ததால் குழந்தை பிறந்த கையோடு தாம்பரம் காச நோய் மருத்துவமனையில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று, ஜூன் 19, 2025 தேதி மாலை குழந்தையுடன் வீடு திரும்பினார்.

தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு:

இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு படுக்க வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் குழந்தை அசைவு இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று போது, அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்தது விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குழந்தையின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். சேலையூர் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை மூச்சு திணறலால் இறந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் குடித்த, பிறந்து 13 நாளே ஆன ஆண் குழந்தை இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.