Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை நீலகிரியில் தொடரும் கனமழை.. மதுரையில் சதமடித்த வெயில்..

Tamil Nadu Weather Alert: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜூன் 27, 2025 தேதியான இன்றும் கோவை நீலகிரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை நீலகிரியில் தொடரும் கனமழை.. மதுரையில் சதமடித்த வெயில்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jun 2025 14:23 PM

வானிலை நிலவரம்: தென்மேற்கு பருவமழையானது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக தீவிரமாக இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் 11 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்பது சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசையை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூன் 27 2025 தேதியான இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை:

கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பதிவாகி வருகிறது. அதே போல் தென்காசி தேனி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஜூன் 28 2025 தேதியான நாளை கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29 2025 முதல் ஜூலை 3 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் காரணத்தால் வெப்பநிலை சற்று தணிந்து காணப்படுகிறது. மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஜூன் 27 2025 முதல் ஜூலை 1, 2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டத்தில் 38 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்திலும் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சிராப்பள்ளியில் 37.7 டிகிரி செல்சியசும், சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியசும் , நுங்கம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.